.

Pages

Wednesday, June 3, 2015

அமீரகத்தில் கடும் வெப்பம் அதிகரிப்பு!

புனித ரமலான் நோன்பை முன்னிட்டு வரும் ஜுன் மாதம் 15-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15 வரை நேரடியாக வெயிலின்கீழ் வேலை செய்யும் (கட்டுமானப் பணிகள், பெட்ரோல் கிணறு வெட்டுதல்) தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு அளிக்குமாறு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவசர வேலை நிமித்தமாக தொடர்ந்து பணிகள் நடைபெற வேண்டிய சூழ்நிலையில் தொழிலாளிகளுக்கு தேவையான குடிநீர், குளிர்பானம் போன்ற ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் இந்த கட்டாய ஓய்வு அளிக்க தவறுபவர்களை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு அளிக்கப்பட வேண்டிய நேரத்தில் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துவது தெரியவந்தால் அந்நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் 50 ஆயிரம் திர்ஹம் அவரை அபராதம் விதிக்கப்படுவதுடன் தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என ஐக்கிய அரபு அமீரக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீரகத்தில் பகலில் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இரவில் வெப்பம் லேசாக உணரப்படும். இந்த வெப்பம் அதிக பட்சமாக 40 டிகிரி செல்சியஸும், குறைந்த பட்சமாக 17 டிகிரி செல்சியஸும் அடிக்கக் கூடும். மேலும் லேசானது முதல் மிதமான காற்று வீசக்கூடும். அது இந்தக் கால நிலைக்கு ஏற்ப இதமாக இருக்கும். இதேபோல் அரேபியன் மற்றும் ஓமன் கடல் காற்று மிதமாக வீசும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - vkalathur

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.