.

Pages

Wednesday, May 8, 2019

+1 தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், மே 08
தமிழகமெங்கும் +1 தேர்வின் முடிவு புதன்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 91 மாணவிகள் தேர்வு எழுதியதில் அனைத்து மாணவிகளும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பள்ளிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், கல்லூரி முதல்வர் எம். முகமது முகைதீன், பள்ளி தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 496/600
இரண்டாம் இடம்: 464/600
மூன்றாம் இடம் :  412/600

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.