.

Pages

Friday, May 24, 2019

6-வது முறையாக எம்.பி. ஆகிறார் S.S பழனிமாணிக்கம்!

தஞ்சாவூர், மே 24
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுகவை சேர்ந்த எஸ்.எஸ். பழநிமாணிக்கம் 6-வது முறையாக எம்.பி. ஆகிறார்.

இவர் கடந்த 1984, 1889, 1991 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய தேர்தல்களில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். இதில், 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டார்.

இதில், தொடக்கச் சுற்று முதல் இறுதி வரை முன்னிலை பெற்று 3,63,652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து 6-வது முறையாக மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.