.

Pages

Wednesday, May 29, 2019

அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்துதர கோரிக்கை!

அதிராம்பட்டினம், மே 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைக்கவும், ரயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீர் ~ மழை நீரை அப்புறப்படுத்த முறையான வடிகால் வசதி அமைத்து தரக் கோரி, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாப்தீன் தலைமையில், செயலாளர் ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக், நிர்வாகிகள் முகமது இப்ராகிம், சேக்கனா நிஜாம், அகமது கபீர், ஏ. அப்துல் ஹாதி, தஸ்லீம் ஆரிப் உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ் அவர்களை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பது;
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஜூன் 1 முதல் திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் சாலை சீரமைக்காமல் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. இப்பகுதியில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி மற்றும் ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்ஹா, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ளதால், நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையில் கடந்து செல்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணியின் போது, இந்த வழியாக கனரக வாகனங்களில் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதனால் சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டு, குழியுமாக காட்சி தருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்று, பயணம் செய்ய முடியாத நிலையிலும், வெயில் காலங்களில் செம்மண் தூசிகள் பறந்து அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே, அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்துதர துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், ரயில் நிலைய  நுழைவாயில் பகுதியில் சுமார் 10 அடி உயரத்திற்கு மண் நிரப்பப்பட்டுள்ளதால், கழிவு நீர் / மழை நீர் சீராகச் செல்ல வழியில்லாமால் வடிகாலில் நிரம்பி வழிந்து அருகில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகின்றன. தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் எங்கள் பகுதி பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

எனவே, கழிவு நீர் / மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறும், சீராகச் செல்லும் வகையிலும், புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால் அமைத்து தருவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ் கோரிக்கை மீது உரிய நடவடிக்கையை ஓரிரு நாட்களில் தாம் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.