.

Pages

Tuesday, May 21, 2019

ஏ.ஜெ ஜும்மா பள்ளிவாசலில் அதிரை பைத்துல்மால் மாதாந்திரக் கூட்டம் ~ இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 21
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதந்திரக்கூட்டம் மற்றும் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் ஏஜே நகரில் அமைந்துள்ள ஏ.ஜெ ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முஹம்மது முகைதீன், ஏ.ஜெ ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை, அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் எம்.இசட் அப்துல் மாலிக் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். அதிரை பைத்துல்மால் தகவல் தொடர்பு அலுவலர் சேக்கனா நிஜாம் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜக்காத், பித்ரா நிதி வசூல், ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி விநியோகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், மஹல்லா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.