.

Pages

Wednesday, May 1, 2019

SSLC தேர்வில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு திமுக நிர்வாகிகள் பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.01
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மெட்ரிக். பள்ளியில் கல்வி பயின்ற ராஜமடம் எஸ்.இளங்கோவன்- இ.கனிமொழி தம்பதி மகள் ரிஷிவந்தினி (493/500) மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடமும், அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் (1 ம் நம்பர்) கல்வி பயின்ற அதிராம்பட்டினம் முத்துராமன்-அபிராமி தம்பதி மகள் எம். ஹம்சத்வனி (477/500) மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடமும், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற அதிராம்பட்டினம் ஜெ.பாலமுருகன்-மாலா தம்பதி மகள் பி.பவ்யதர்ஷிணி (478/500) மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடமும், அதே பள்ளியில் கல்வி பயின்ற எச்.பாலகிருஷ்ணன்- விஜயலட்சுமி தம்பதி மகன் சந்தோஷ் (476/500) மதிப்பெண் பெற்று பள்ளியளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், பொருளாளர் கோடி.முதலி, மூத்த உறுப்பினர்கள் எம். இப்ராஹீம், இ.வாப்பு மரைக்காயர், மாவட்ட பிரதிநிதி எம்.பகுருதீன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் நாகராஜ், வார்டு பொறுப்பாளர்கள் முகமது சரீப், ராஜா, வீரசேகரன் ஆகியோர் சாதனை மாணவ, மாணவிகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.