அதிராம்பட்டினம், மே 17
அதிராம்பட்டினம் கரையூர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முருகன் வீட்டின் வாசல் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், அங்குள்ள அலமாரியை திறந்து அதிலிருந்த 31 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியனவற்றை திருடிச் சென்றுவிட்டனராம்.
இதுபற்றி தகவலறிந்து ஊர் திரும்பிய முருகன், புதன்கிழமை அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.