.

Pages

Sunday, May 26, 2019

துபையில் TIYA அமைப்பின் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 26
துபையில் அமீரக TIYA அமைப்பின் 7-ஆம் ஆண்டு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துபையில் கடந்த 6 ஆண்டுகளாக அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் (TIYA)  சார்பாக நடைபெற்று வந்த இஃப்தார் எனும் நோன்பு திறப்பு மற்றும் மஹல்லாவாசிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சி 7-வது வருடமாக  அபூ ஹாயில் பகுதியில் அமைந்துள்ள ஹம்ரியா பூங்காவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், மேலத்தெரு முஹல்லாவாசிகள், குடும்பத்தினர்கள், அமீரக வாழ் அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பிற ஊர் சகோதரர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் துணைத்தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் என்.அப்துல் மாலிக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், TIYA அமைப்பு ஆற்றி வரும் பல்வேறு சமூக நலப் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

இஃப்தார் நிகழ்வுகளை அமீரக TIYA நிர்வாகிகள் ஒழுங்கு செய்திருந்தனர். மேலும் மேலத்தெரு மஹல்லாவாசிகள் பலர் ஸ்பான்சர் செய்திருந்தனர்.  நிர்வாகிகள், உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள் என அனைவரும் உற்சாகத்துடன் களப்பணிகளிலும், உணவு தயாரிப்பிலும், உபசரிப்பிலும் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

இறுதியாக, கலந்து கொண்ட மஹல்லாவாசிகளுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும், உடல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நல்கியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.