.

Pages

Tuesday, May 28, 2019

இறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவி தொடர் சாதனை!

தொடர் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவி அஸ்மிதா
அதிராம்பட்டினம், மே.28
மன்னார்குடி சாய்னா இறகுப் பந்து கழகத்தின் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான இறகுப்பந்துப் போட்டி மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அ. அஸ்மிதா கலந்து கொண்டு, 15 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாமிடம் பெற்று பள்ளிக்கும், அதிராம்பட்டினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏற்கனவே இவர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த மே.10, 11, 12 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவி அஸ்மிதா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜுமுதீன் மகள் ஆவார்.

தொடர் சாதனை படைத்த மாணவி அஸ்மிதா, பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், பள்ளித்தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.