தஞ்சாவூர் மே.01-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த, படிப்பில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கி, படிப்பில் மேலும் சிறந்து விளங்கி உயர் பதவி அடைய வேண்டும் என வாழ்த்தினார்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கு.அபிநயா, 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹா.ஜெசிமா மற்றும் ஆதனூர் கிழக்கு பள்ளி மாணவர் மனோஜ்குமார், மாணவி இரா.தேவகி ஆகிய 4 பேருக்கும் தலா ரூ 2 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ 10 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
அப்போது வட்டாரக்கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன், நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகி தி.சாமியப்பன், வட்டாரக் கல்வி அலுவலக ஊழியர் தங்கராமன், தலைமை ஆசிரியர்கள் இரா.சித்ரா தேவி, கு.செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த, படிப்பில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கி, படிப்பில் மேலும் சிறந்து விளங்கி உயர் பதவி அடைய வேண்டும் என வாழ்த்தினார்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கு.அபிநயா, 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹா.ஜெசிமா மற்றும் ஆதனூர் கிழக்கு பள்ளி மாணவர் மனோஜ்குமார், மாணவி இரா.தேவகி ஆகிய 4 பேருக்கும் தலா ரூ 2 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ 10 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
அப்போது வட்டாரக்கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன், நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகி தி.சாமியப்பன், வட்டாரக் கல்வி அலுவலக ஊழியர் தங்கராமன், தலைமை ஆசிரியர்கள் இரா.சித்ரா தேவி, கு.செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.