.

Pages

Monday, May 27, 2019

'உங்களில் ஒருவனாக இருந்து தொண்டாற்றுவேன்' ~ அதிரையில் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் பேச்சு!

அதிராம்பட்டினம், மே 27
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட எஸ்.எஸ் பழனிமாணிக்கம் 3,68,129 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனது வெற்றிக்கு பாடுபட்ட திமுக தலைமையிலான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.

அதன்படி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை இரவு வருகை தந்த எஸ்.எஸ் பழனிமாணிக்கம், சுமார் 11,000 த்திற்கும் மேற்பட்ட வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்த அதிராம்பட்டினம் பேரூர் பகுதி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது;  
எனது வேண்டுகோளை ஏற்று நான் எதிர்பார்த்ததை வீட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தீர்கள். தேர்தலின் போது நீங்கள் அளித்த வேண்டுகோளை நிறைவேற்றித்தருவது என்னுடைய கடமை.

திமுக கூட்டணியை சேர்ந்த அணி மத்தியில் ஆட்சியில் வராத காரணத்தால், நீங்கள் அளித்த வாக்குறுதிகளெல்லாம் நிறைவேற்ற முடியுமா? என்று கேள்வி கேட்க தொடங்கி இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானாலும், திமுக தேர்தல் அறிக்கையானாலும், இவை, எங்களின் விருப்பு-வெறுப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்டது அல்ல. மக்களின் தேவையை உணர்ந்து அவர்களின் விருப்பத்தின் பேரில் தயாரிக்கப்பட்டது. விவசாயிகள் கடன் தள்ளுபடி என்பது நியாமற்றது அல்ல, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி என்பது நியாமற்ற கோரிக்கை அல்ல. கூலித் தொழிலாளிகளுக்கு 150 நாள் வேலை வாய்ப்பு என்பது தேவை இல்லாத ஒன்றல்ல. இவையெல்லாம் நாட்டின் அடிப்படைத் தேவைகள்.

தமிழனத் தலைவர் கலைஞர் காலத்தில் எப்படி சிறுபான்மையின மக்களின் காவல் அரணாக திகழ்ந்தாரோ, அதைபோலத்தான் தளபதி ஸ்டாலின் காலத்திலும் சிறுபான்மையின மக்களின் நலனைப் பாதுகாப்பதில் காவல் அரணாக, சிப்பாய்களில் ஒருவனாக உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகிய நானும் செயல்படுவேன்.

தேர்தலுக்கு முன்பு நான் ஒரு மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியின் வேட்பாளர். தேர்தலுக்கு பிறகு இந்த தொகுதி வாக்காளர்கள் அனைவருக்குமான நாடாளுமன்ற உறுப்பினர். நான் இங்கு வாக்கு கேட்டு வரும் போது, நீங்கள் இந்த ஊரின் பல்வேறு பிரச்சனைகளை என்னிடம் எடுத்து வைத்திருக்கிறிர்கள். அதில், அதிராம்பட்டினம் பகுதியில் நீர் ஆதாரங்களை கொண்டுவர வேண்டும் என்பது. அதற்கான முயற்சியில் ஒரு அரசாங்கம் மாறினால்தான் கொண்டு வர வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரால் கொண்டு வர முடியும். உங்களில் ஒருவனாக இருந்து எதிர்காலத்தில் தொண்டாற்றுவேன். எந்த தேர்தலிலும் நான் அளித்த வாக்குறுதிகளை எந்தக் காலத்திலும் மறக்காத காரணத்தால்தான் உங்களின் ஆதரவை தொடர்ந்து பெற முடிகிறது' என்றார்.

இதில், திமுக பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஏனாதி. பாலசுப்பிரமணியம், கா. அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.