.

Pages

Wednesday, May 15, 2019

அதிரையில் ஆதரவற்ற 237 பயனாளிகளுக்கு 1185 கிலோ அரிசி வழங்கல்!

அதிராம்பட்டினம், மே.15
அதிரை பைத்துல்மால் அமைப்பின் சேவை திட்டத்தின் கீழ், வாழ்வாதார உதவியாக ஆதரவற்ற பெண்களுக்கு ஸதகா அரிசி வழங்கும் நிகழ்ச்சி அவ்வமைப்பின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார்.

இதில், ஆதரவற்ற அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 237 பெண் பயனாளிகளுக்கு, தொழில் அதிபர் அதிரை ஹாஜி எம்.ஏ முகமது முகைதீன் வழங்கிய தலா 5 கிலோ வீதம் மொத்தம் 1185 கிலோ ஸதகா அரிசி வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் நிர்வாகிகள் இசட். அப்துல் மாலிக், ஏ. முகமது முகைதீன், இ. வாப்பு மரைக்காயர், எம்.நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.