.

Pages

Tuesday, May 28, 2019

காரைக்குடி ~ திருவாரூர் ரயில் சேவையை தொடங்க வேண்டும்: ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்!

பட்டுக்கோட்டை மே.28-
தமிழ்நாடு அரசு  அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை வட்டக் கிளை மூன்றாம் ஆண்டு மாநாடு பட்டுக்கோட்டை விஜயாலயம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சங்கக் கொடியை வட்டக் கிளைத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி மாநாடு தொடங்கியது. வட்டத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். தமிழரசன் தமிழ்தாய் வாழ்த்து பாடினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண.கல்யாணம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். த.வேதையன் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் சிவ. ரவிச்சந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வட்டச் செயலாளர் சு.க.பாலகிருஷ்ணன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஆர். புருஷோத்தமன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். விவாதத்தில் ஏ.மணி, எஸ். பட்டாபிராமன் கலந்து கொண்டனர்.

தீர்மானம் 
கூட்டத்தில், காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் முடிந்து, மார்ச் 29 இல் சோதனை ஓட்டமும் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை ரயில் சேவை இயக்கப்படவில்லை. காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதையில் லெவல் கிராசிங் கேட்டுகளுக்கு, கேட்கீப்பர்கள் பணியமர்த்தாத காரணத்தினால், ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

எனவே காலியாக உள்ள ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர் பணியிடங்களை ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிரப்பி, பொதுமக்களுக்கு முழு அளவிலான ரயில் சேவையை தொடங்க வேண்டும். ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கியது போல, சென்னைக்கும், காரைக்குடிக்கும் இரு முனைகளில் இருந்தும் இரவு, பகல் நேர ரயில் வசதி செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கு பயன்படும் வகையிலும், சென்னை செல்லும் இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களுக்கு இணைப்பு ரயிலாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்களை ஆர்.மனோகரன், என்.செல்வம், பி.சமுதாக்கனி,
ஜீ.தெட்சிணாமூர்த்தி, த. சந்திரமோகன் ஆகியோரால் முன்மொழியப்பட்டது.

பாராட்டு 
75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு கைத்தறி துண்டு அணிவித்து பேராசிரியர் மரு.சி.கணேசன் பாராட்டுரை வழங்கினார். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறை சென்ற வருவாய் கிராம உதவியாளர்கள் கே.பாலு, டி.ஜெயக்குமார், பி.முகுந்தன், சி.ஜார்ஜ், சத்தியராஜ், வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு கைத்தறி ஆடை அணிவித்து, மாவட்ட துணைத் தலைவர் ஏ.விஸ்வநாதன், மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

மாநாட்டில் தோழமை தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் சி.திருஞானம்,
எஸ்.பாலகிருஷ்ணன், பி.அறிவழகன், ஏ.செல்வராஜ், முருக.சரவணன், கி.பிச்சைமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு 
இம் மூன்றாவது மாநாட்டில் சங்க வட்ட கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர்.அண்ணாதுரை, செயலாளராக கண.கல்யாணம், துணைத் தலைவர்களாக ஆர்.தமிழ் செல்வன், தி.தமிழரசன், இணைச் செயலாளர்களாக க.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.தமிழ்மணி நிறைவுரையாற்றினார். நிறைவாக க.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.