.

Pages

Thursday, May 2, 2019

பிலால் நகர் பள்ளியில் மக்தப் முதலாம் ஆண்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் மக்தப் பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, மக்தப் அதிராம்பட்டினம் சென்டர் பொறுப்பாளர் முஃப்தி அப்துல் ஹாதி பாகவி தலைமை வகித்து, 'பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோரின் கடமை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

விழாவில், பள்ளி மக்தப் ஆசிரியர்கள் ஹாபிழ் அபூபக்கர், மவ்லவி தன்வீர், சாபீர் ஆகியோர் கலந்துகொண்டு மார்க்க அறிவுத்திறன் போட்டிகளை நடத்தினர். இதில், மக்தப் மதரசா மாணவர்கள் 62 பேர் கலந்துகொண்டனர். இதில், 28 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஒழுக்கம், தொழுகை, வருகைப் பதிவேடு, சீருடை அணிவித்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிலால் நகர் ஜமாஅத் தலைவர் முகமது முகைதீன், அதிரை அமீன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் கடந்த ஓர் ஆண்டாக தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாணவர்களுக்கான மக்தப் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில், இப்பகுதியை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.