.

Pages

Monday, June 10, 2013

குற்றாலாத்தில் களைகட்டிய சீசன் ! அதிரையர்கள் படையெடுப்பு !

ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலே குளுமையை விரும்புவோரின் நினைவுக்கு வருவது குளு குளு குற்றாலம்தான். ஆகஸ்ட் மாதம் இறுதிவரை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் குவியும் 
ஒரே இடமாகத் திகழ்வது குற்றாலம் மட்டுமே.

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் உறவாடிக்கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இச்சாரல் விழும் இக்காலகட்டத்தைக் 'குற்றால சீசன்' என அழைப்பார்கள். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. வறண்டு கிடந்த அருவிகளில் பரவலாக தண்ணீர் விழத்துவங்கின. இதனால் வானம் கருமேகமூட்டத்துடன் ஆங்காங்கே காணப்படுகின்றன. 

இங்குள்ள பல்வேறு அருவிகளில் குறிப்பாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்வதற்காக அதிரையர்கள் படையெடுத்து செல்கின்றனர்.





5 comments:

  1. பதிவுக்கு நன்றி. இன்றைய பதிவுகளில் புகைப்படங்கள் அனைத்தும் ஜோர்.

    குற்றால அருவியை கண்ணில் காட்டி ஊருக்கு வர தூண்டிவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    மிகவும் பயணுள்ள அதுவும் சிலவிஷயங்களை அறியத்தந்தமைக்கும், நன்றி.

    இந்த கட்டுடையை படிக்கும்போது எனக்கு ஒரு தமிழ் பழையபாடல் ஞாபகத்துக்கு வருது.

    திரைப்படம் - நல்லவன் வாழ்வான்.
    வருடம் - 1961
    நடிப்பு - எம்.ஜி.ஆர் - ராஜசுலோஷனா.

    பாடல் - குற்றாலம் அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா, மனசே மயக்குதா, சுகமும் கிடைக்குதா.

    பாடியவர்கள் - சீர்காழி கோவிந்தராஜன், பி.லீலா.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. குற்றால சீசன் கலைகட்டியாற்று பின்பு என்ன அதிரை மக்களின் படையெடுப்பு அதிகமாக காணப்படும்.

    செல்வது முக்கியமல்ல வேலாவேலை தொழுகையை விஷயத்தில் தவறாமல் இருப்பது மிக மிக கவனம் தேவை

    அருவிகளின் புகைப்படம் அருமை

    சுபுஹனல்லாஹ் தண்ணீருற்று வரையப்பட்ட ஓவியம் போல் காட்சியளிக்கிறது..

    ReplyDelete
  4. ஆஹா குளு குளு குற்றாலம் ! கிளம்பிடவேண்டியதுதான் :)

    ReplyDelete
  5. புகைப்படம் அருமை இதை பார்க்கும் போதே பரவசம் மூட்டுக்கிறது குளிப்பதற்கு பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.