.

Pages

Friday, October 3, 2014

25 லட்சத்திற்கும் அதிகமான ஹாஜிகள் ஒன்று கூடிய அரஃபா தினம் - ஹாஜிகளுக்கு பணிவிடை செய்யும் IFF தன்னார்வலர்கள்!

முஸ்லிம்களின் புனித கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற உலகெங்கிலுமிருந்து 25 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித மக்காவிற்கு வருகை புரிந்துள்ளார்கள். ஹஜ்ஜின் முக்கிய நாட்களில் ஒன்று  அரபா தினம். இந்நாளில் அனைத்தும் முஸ்லிம்களும் இன நிற மொழி உடை பேதமின்றி வெள்ளாடை அணிந்தவர்களாக ஒரே இடத்தில் ஒன்று கூடி ”லப்பைக் அல்லாஹீம்ம லப்பைக்” என்று தல்பியா கூறியவர்களாக ஏக இறைவனை போற்றுவதாகும்.

இன்று (3.10.2014) அரபா தினமாகும். 25 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேற்று இரவு முதல் அரபாவில் ஒன்று கூடலாயினர். இன்று அந்தி சாயும் வரை தங்கியிருந்து இறைவனை போற்றுவதோடு பிராத்தனைகளிலும் ஈடுபட்டனர். மஸ்ஜித் நமீராவில் அரபா தினத்தின் குத்பா உரை நடாத்தப்பட்டது. இந்த குத்பா உரையை சவுதி பேரறிஞர் அப்துர் ரஹ்மான் ஆலு சேக் அவர்கள் நடத்தினார்கள்.

அரபாவில் இந்திய மக்களுக்கு சேவைகள் புரிவதற்காக இந்தியா பிரடர்னிடி போரத்தின் நூற்றுக்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் முஜீப் தலைமையில் ஒன்று கூடினர். இந்திய ஹாஜிகளை  இரயில் நிலையங்களிலிருந்து அரபாவின் கூடராங்களில் கொண்டு சேர்ப்பது. வழி தவறியவர்களை அவர்களுக்குரிய கூடாரங்களுக்கு கொண்டு சேர்ப்பது. முதியோர்களை சக்கர நாற்காலி மூலம் உதவுவது என தங்களது சேவைகளை திறம்பட செய்தனர்.

மேலும் ஹாஜிகள் இன்று இரவு அரபாவிலிருந்து முஸ்தலிபாவிற்கு சென்று இரவில் தங்கி நாளை காலை மினாவிற்கு திரும்புவார்கள். இந்நிலைகளில் இந்தியா பிரடர்னிடி போரத்தின் (IFF) தன்னார்வ தொண்டர்கள் ஹாஜிகளுக்கு உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளார்கள்.


அரபாவிலிருந்து அபூமுஸஅப், படங்கள் வசீம்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.