ஏரிபுறக்கரை கிராம மீனவ கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி பள்ளி சாலை வழியாக சென்று இறுதியில் கல்லூரி முக்கத்திற்கு வந்தடைந்தது.
இதையடுத்து கண்டன உரையை அதிமுக அதிரை நகர செயலாளர் பிச்சை நிகழ்த்தினார். பேரணியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதில் மீனவ கிராம பொதுமக்கள் மற்றும் அதிமுகனர் கலந்துகொண்டனர்.


.jpg)







தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார் முதல் கொளத்தூர் மணி, என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.
ReplyDeleteஅம்மாவுக்கு எதிராக சதி', 'அம்மாவைப் பொய்வழக்கில் உள்ளே தள்ளிவிட்டார்கள்' என்ற கூக்குரல்களைச் சுற்றிலும் கேட்கும்போது, நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியோ, உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு ஜெயலலிதா உள்ளே போய்விட்டாரோ என்ற பிரமை ஏற்படுகிறது. கொஞ்சம் அழுத்தமாக நம்மை நாமே கிள்ளிப் பார்த்தால்தான், ஜெயலலிதா உள்ளே போனதற்குக் காரணம் உப்புச் சத்தியாகிரகம் அல்ல. ஊழல் வழக்கு என்ற உண்மை உறைக்கிறது.