கடந்த சில நாட்களாக அதிரையின் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் காணப்படும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் அதிரை - மிலாரிக்காடு நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், மாணவ மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரம்மதுக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் வயோதிகர்கள் சாலையில் நடக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
அப்பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் பலர் பல்வேறு காலகட்டங்களில் சம்பந்தபட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இவர்களிடமிருந்து எவ்வித பணியும் தொடரவில்லை. இந்நிலையில் இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, இந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் இப்ராஹீம், சிவக்குமார் ஆகியரோடு சிஎம்பி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் - இளைஞர்கள் திரளாக தஞ்சை சென்று மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் போட்டோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது இதனை மாற்ற அவரால் முடியல. செயல் படாத ஆட்சியர் அலுவலகம் என்று சொல்லலாம். இவர் சகாயதிடமிருந்து ரொம்ப கற்று கொள்ளவேண்டும்.
ReplyDeleteசமூக ஆர்வலர்கள் சேர்மனுடன் சென்று ஊருக்கு நல்லது நடக்க வலியிருத்தியது வரவேற்க்கதக்கது...வாழ்த்துக்கள்
ReplyDeleteநடக்கும் என்பார், அது நடக்காது.
ReplyDeleteநடக்காது என்பார், அது நடந்துவிடும்.
இப்போ எது நடக்கும், எது நடக்காது என்று தெரியாது.
தெரியாது போனால் நல்லது, தெரிந்து தெரியாது போனால் கஷ்டம்.
நெடுநாளைய பிரச்சனைக்கு முயற்சி தொடங்க பட்டுள்ளது மனு கொடுத்ததுடன் வழமைபோல் சோர்ந்து விடாமல் இதை செய்து முடிக்க எந்த வகையில் செயல் பட வேண்டும் என்ப்தை ஆராய்ந்து சமூக ஆர்வலர்கள், முகல்லா வாசிகள், கவுன்சிலர்,தலைவர் மற்றும் உதவி தலைவர் கூட்டாக முயற்சி செய்து தொடங்கிய காரியம் வெற்றி பெற முழு முயற்சி செய்ய வேண்டுகிறேன்.
ReplyDeleteM.அப்துல் கலாம்.