.

Pages

Wednesday, October 29, 2014

நிரம்பும் தருவாயில் செக்கடி குளம் - நேரடி விசிட் [ படங்கள் இணைப்பு ]

கடந்த இரண்டு நாட்களாக வந்த தண்ணீரால் தற்போது குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீருடன் காட்சியளிக்கும் செக்கடி குளத்தை பார்வையிடும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியினர் குளத்தின் தோற்றத்தை காண இன்று காலை கொட்டிய மழையிலும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

முன்னதாக செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அதிரையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் செக்கடி குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்வது நின்ற பிறகு மீண்டும் பணிகள் தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது.

5 comments:

  1. செக்கடிக்குளம் தன்னைப் பார்த்து, தன்னைத் தானே சந்தோஷப்படுகிறது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. செக்"கோடி" குளம்

    ReplyDelete
  4. கொஞ்சம் செடியன் குலத்தையும் கவனிங்க சார்.
    அதன் அருகில் உள்ளவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாமல் போய்விட்டது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.