இதுகுறித்து கடந்த வாரம் அதிரை நியூசில் வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பு...
அதிரையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தொக்காலிக்காடு கிராம். விவசாய கிராமமான இங்கு பெரும்பாலானோரின் தொழிலாக தென்னை மற்றும் தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பச்சை பசேல் என குளுமையுடன் காட்சியளிக்கும் இந்த கிராமத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடியது மஹாராஜா சமுத்திர அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் நீர் ஆகும். இந்த நீரை எடுத்துதான் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே பயனைத்தரும். மற்ற நேரங்களில் இந்த அணை நீரின்றி வறண்டே காட்சியளிக்கும்.
எந்தவருடமும் இல்லாத அளவு இந்தவருடம் பொய்த்து போன மழையால் அதிரையில் உள்ள அனைத்து குளங்களும் நீரின்றி வறண்டு காணப்பட்டு வருகின்றன. அதிரையர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள் இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன. இருக்கும் வேறு சில குளங்களிலும் கழிவு நீர்கள் சூழ்ந்து காணப்படுவதால் தினமும் குளத்திற்கு சென்று குளித்து மகிழுவோருக்கு சற்று வேதனையை ஏற்படுத்திருக்கக்கூடும்.
அதிரையை சுற்றி இருக்கக்கூடிய சின்ன ஏரி, பெரிய ஏரி, ராஜாமடம் அணை ஆகிய நீர் நிலைகளை நாடிச்செல்வது இவர்களுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தொக்காலிகாட்டில் உள்ள மஹாராஜ சமுத்திர அணையில் குளிப்பதற்கு ஏற்ற அமைப்பில் சற்று இலகுவாக அமைந்திருப்பதால் அதிகமானோர் விரும்பிச் செல்கின்றனர். குறிப்பிட்ட சில வாரங்களில் மாத்திரமே நீரைக்கொண்டுள்ள இந்த அணையில் வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வரும் இளைஞர்களும், உள்ளூரில் வசிக்கும் இளைஞர்களும் ஆர்வத்துடன் இந்த அணைக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தண்ணீர் வரத்து மிதமாக இருப்பதால் அதிகமான நேரம் குளித்து மகிழ்கின்றனர். பயணத்திற்காக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் இவர்கள் குளித்து முடித்தவுடன் காலை பசியாற அணையின் அருகில் உள்ள ஆழ மரத்தடியின் நிழலில் அமர்ந்து வாங்கிச் செல்லும் புரோட்டாவை உண்டு மகிழ்கின்றனர். இங்கு சென்றுவர அதிகமாக வார விடுமுறை தினங்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இப்படி நம் சகோதர்கள் குளிக்கும், அரை நிர்வாண படத்தை, அதிரை நியூசில் வெளியிடுவது சரிதாநா?. உங்கள் வலி தளத்தை நமது சகோதரிகளும் பார்க்கத்தானே செய்வார்கள்?
ReplyDeleteபடம் எதுவாக இருந்தாலும் பார்ப்பவர் நோக்கம் சரியாக இருந்தால் எதுவும் தவறு இல்லை ,டாக்டர் மருத்துவம் பார்க்க கையை பிடிக்கிறார் ,சீசே ரியன் கூடசெய்கிறார் அந்நிய ஆடவன் கை பிடிக்கலாமா ?ஆடை விளக்கி அறுவை சிகிச்சை செய்யலாமா ?என கேட்ககூடாது இதே ஜட்டி உடன் போட்டால் நீங்கள் கேட்பது சரி ,உங்கள் ஊர் குளத்தில் ஆண்கள் குளிப்பதை பஸ் பயணிகள் பார்பதில்லையா ,சும்மா குற்றம் கண்டுபிடிக்காமல் என்கராஜ் பண்ணுங்க
ReplyDelete