.

Pages

Friday, October 3, 2014

பட்டுக்கோட்டை மரக்கடையில் திடீர் தீ விபத்து !

பட்டுக்கோடை கோட்டைக்குளத்தை சேர்ந்தவர் பெரிய சாமி(55). வண்டிப்பேட்டையில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது பட்டறையில் ஆயுத பூஜை விழா நடந்தது. பின்னர் அவர் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி க்கு இவரது மரப்பட்டறை தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரியசாமிக்கு  தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர் ந்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதற்குள் பட்டறையில் உள்ள எந்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள், ஒரு பைக் ஆகியவை எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.