.

Pages

Tuesday, October 21, 2014

அதிரையில் வெள்ள பாதிப்பு - ஒரு நேரடி ரிப்போர்ட் ! [ படங்கள் இணைப்பு ]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ந் தேதி தொடங்கியதை அடுத்து அதிரையில் கடும் வெயிலையும், சூட்டையும், வறட்சியையும் சந்தித்து வந்த பொதுமக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இந்த தொடர் மழை அமைந்து இருந்தது. கடந்த சில நாட்களாக அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அதிரை நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் இன்னும் சில தினங்களுக்கு மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் மழையால் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம், பிலால் நகர், புதுத்தெரு, முத்தம்மாள் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்படைந்துள்ளது. பிலால் நகர், முத்தம்மாள் தெரு, புதுதெரு ஆகிய பகுதிகளில் காணப்படும் குடிசைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நகரில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்த காணப்பட்டது. பிரதான பகுதிகளில் நடைபெறும் அன்றாட வியாபாரங்கள் பெருமளவு முடங்கி காணப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிரையில் நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு 20.3 மில்லி மீட்டர் பதிவாகி இருக்கிறது. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ந்த காற்றும் வீசிவருகின்றன. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

அதிரையின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகின்றன. பிராதன சாலைகளிலிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. நல்ல மழை பெய்தும் பெரும்பாலான குளங்களில் போதுமான தண்ணீர் வரத்து வந்து சேரவில்லை. வழக்கமாக தண்ணீர் வரும் வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அடைப்புகளே காரணம் என கூறப்படுகிறது. அதிரை பேரூராட்சி ஊழியர்கள் கொட்டும் மழையில் நகரில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பை கூளங்களை துரிதமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

நகரில் ஆங்காங்கே தேங்கி காணப்படும் மழை நீரை அந்தந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் தன்னார்வத்துடன் அப்புறப்படுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைகால தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் குடிநீரை சூடு படுத்தி பருக வேண்டும் எனவும், மின்விபத்தை தடுக்கும் நோக்கில் ஈரமாக காணப்படும் மின் சாதனப் பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

















படங்கள் : சாஜித்

6 comments:

  1. It's very sad.
    District collector should take necessary action immediately.other wise, it will affect the people in various methods such as disease,loss lives and property etc...
    I urge government body and also private groups and organizations to take part in this flood situation.
    May Allah accept our good deeds

    ReplyDelete
  2. இந்த வெள்ளம் இன்று நேற்று அல்ல, அந்த காலம்தொட்டே நடந்துவரும் ‎இயற்கையின் விளையாட்டு, அரசு அதிகாரிகள் ஓரளவுக்கு தான் உதவ ‎முடியும், வரும் முன் காப்போம் என்று நாம் தான் முன்னெச்சரிக்கையாக ‎இருக்க வேண்டும். ‎

    ReplyDelete
    Replies
    1. ரிதுவான் வருமுன் காப்போம் என நாம் பாதுகாத்துக் கொள்ள நம்மஜமாஅத் போதுமே எதுக்கு கவுன்சிலர் ,தலைவர்,66 கோடி கூட மிச்சம் தானே

      Delete
  3. செடியன் குளம் நிலை என்ன ?

    ReplyDelete
  4. ஜனாப். அஹ்மது ரிதுவான் - துபாய்.

    சுத்தமாக வைத்திருப்பது மக்களின் கடமை, ஆனால் சாலை இப்படி அமைத்து குடுத்தது யார்?

    சாலை அமைப்பதற்கும், தெருவினை பரமதிபதற்கும், நமக்காக செயல் படுவதற்குதான் அரசும், அரசு அதிகாரிகளும், சேர்மன், "MLA", அமைச்சர், முதல் அமைச்சர் எல்லாம், பிறகு எதற்கு நீங்கள் ஒட்டு போடுகிரிகள், எதற்கு வரி செலுதிரிர்கள், நீங்களா அனைத்தையும் செய்து கொள்ளலாமே.

    அதிகாரிகளின் செயல் அலட்சியமும், தரம் இல்லாத சாலை அமைந்திருகிறது, சட்ரூ சிந்தியுகள், மன்னிக்கவும்.

    கருதுறுமைக்காக

    முஹம்மத் ஷரீப்

    ReplyDelete
  5. பிலால் நகர் மற்றும் நூர் லாட்ஜ் பாலம் வழியாக காலேஜ் சந்திப்பில் இருந்து செல்லும் வெள்ள நீர்கள் அதிகம் செம்படவன் தெரு வழியாக கடலில் கலக்கின்றன ECR என்ற பிரதான சாலைகள் உயத்த பட்டதால் முத்தம்மாள் தெரு வெள்ளநீர்கள் அந்த வாய்க்காலை சென்று அடையாது காரணம் அங்கு போதுமான வடிகால் இல்லை இவைகளை ஊரில் நான் இருந்த சமயங்களில் நேரில் பார்த்தவன் ஆகவே நான் மேற்கூறிய காலேஜ் சந்திப்பு உபரி நீர்களை இடைவெளி குறைவாக அருகில் உள்ள செட்டியாற்குளத்திர்க்கு கொண்டு செல்ல ஏதுவாகும் இதை பலமுறை வலி உரித்தி உள்ளேன் கவனத்தில் கொள்வது நலம் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.