.

Pages

Saturday, October 18, 2014

அடி பைப்பை சீர்செய்ய கோரி சமூக ஆர்வலர் 'சூனா ஈனா' பேரூராட்சி வாசலில் தர்ணா !

முத்துப்பேட்டை பழைய பஸ்டான்ட் ஆட்டோ ஸ்டான்ட் (பட்டரைக்குளம்) அருகில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட அடிப்பைப்பு ஒன்று பலமாதங்களாக பழுதுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் சிரமபட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி ஆட்டோ சங்க நிர்வாகியும், அ.தி.மு.க வார்டு செயலாளருமான சுல்தான் இபுராஹிம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் சீர் செய்யவில்லை. இதனால் வெறுத்துப்போன சுல்தான் இபுராஹிம், நேற்று காலை முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலம் சென்று வழக்கம் போல் புகார் தெரிவித்தார். அதிகாரிகளும் வழக்கம் போல் பதில் கூறி அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுல்தான் இபுராஹிம் பேரூராட்சிக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரூராட்சி வாசலில் உக்காந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது அங்கு இருந்த பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல் வகாப், பேரூராட்சி பிளம்பரிடம் உடன் சரிசெய்ய கூறிவிட்டு பைக்கில் ஏறி செல்ல முயச்சி செய்தார். இதனைக்கண்ட சுல்தான் இபுராகிம், அவரது பைக்கை மறைத்து பேரூராட்சியின் கேட்டை மூடி 'உடன் வேளைக்கு ஆள் சென்றால் தான் உங்களை விடுவேன்' என்று ரகளையில் ஈடுபட்டார். அதன்பின்னர் பேரூராட்சி பிளம்பர் காஸ்டா தலைமையில் ஊழியர்கள் சென்று பழுதான அடி பைப்பை சரிசெய்தனர். அ.தி.மு.க பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க நிர்வாகி ஒருவரே போரட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழுதடைந்த அடி பைப்


பேரூராட்சி சார்பில் உடனடியாக சீர் செய்யப்பட்ட பிறகு


செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை,
முத்துப்பேட்டை

1 comment:

  1. உங்களின் பொதுநல சேவை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.