.

Pages

Thursday, October 16, 2014

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ! உங்களுக்கு இடமுண்டா !?

தஞ்சை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் இடம்பெற வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் தொடர்பு கொண்டு அறியலாம். மேலும், இந்தப் பட்டியல்களை http://www.elections.tn.gov.in/ என்ற வலைத்தளத்திலும் காணலாம்.

பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், முகவரியை மாற்ற விரும்புகிறவர்கள், வயது, பெயர், முகவரியில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து கொள்ள விரும்புவர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் நவம்பர் 10–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் புதிதாக சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன் இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றிற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். ரேஷன் அட்டை, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், டிரைவிங் லைசன்சு, பாஸ்போர்ட், தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது, ஆதார் அட்டை போன்றவற்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம்.

வயது சான்றாக பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி சான்றின் நகல் வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும். ஜனவரி 1–ம் தேதி 2015–ம் ஆண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

முதல் முறையாக விண்ணப்பிக்க கூடியவர்கள் தவிர மற்ற மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க படிவம் 6–யும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால் படிவம் 001–யும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட 6ஏ படிவத்தை நேரிலோ அல்லது தபாலிலோ அளிக்கலாம். தமிழ்நாட்டில் கிராம சபை மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்கள் வரும் 17, 30 தேதிகளில் நடைபெறுகிறது.

அக்டோபர் 26, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவங்களை மொத்தமாக கொடுக்கக்கூடாது. ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் ஒரு முகவரை நியமிக்கலாம். அவர் தினமும் 10 படிவங்களை மட்டுமே அளிக்கலாம். போலியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

2 comments:

  1. லிங்க் தவறாக உள்ளது சரிசெய்யவும்

    http://www.elections.tn.gov.in/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !

      தவறு சரி செய்யப்பட்டது.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.