கடந்த சில நாட்களாக அதிரையின் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் காணப்படும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் அதிரை - மிலாரிக்காடு நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், மாணவ மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரம்மதுக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் வயோதிகர்கள் சாலையில் நடக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
அப்பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் பலர் பல்வேறு காலகட்டங்களில் சம்பந்தபட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இவர்களிடமிருந்து எவ்வித பணியும் தொடரவில்லை. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் 21 வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் - இளைஞர்கள் சார்பில் சிஎம்பி லேன் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் - தார் சாலை அமைத்து தர கோரி அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்க திரண்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
படங்கள் : நூவன்னா
அல்ஹம்துலில்லாஹ்...வரவேற்க்ககூடிய விஷயம்..சிஎம்பி லைன்க்கு பெரியவர்கள் மற்றும் இளைஞர்களால் ஏற்படும் நற்செயல்களுக்கு பேரூர் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து கலப்பணியாற்றிட நானும் இந்த மஹல்லாவாசி என்கின்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteபேரூர் தலைவர் இம்மனுவைதான் எதிர் நோக்கி காத்திருந்திருப்பார் என்று நாம் அறிவோம் ஆகவே துரிது நடவடிக்கை எடுக்கும் என்று காத்திருப்போம். இன்ஷா அல்லாஹ்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பதில் ஏதும் கிடைத்ததா?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com