.

Pages

Thursday, October 16, 2014

காதிர் முகைதீன் கல்லூரி என்சிசி மாணவ மாணவிகள் பங்கேற்ற மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி என்சிசி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஜலால் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் மழைநீர் சேகரிப்பை பற்றி விழிப்புணர்வு உண்டாக்கும் வாக்கியங்களை கொண்ட பலகைகளை கையிலேந்தி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஊர்வலமாக அதிரையின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தனர். இதில் காதிர் முகைதீன் கல்லூரி லியோ கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய சூழலில் மழைநீரை சேகரிப்பது பற்றிய முக்கியத்துவம் மற்றும் அச்சேகரிப்பின் கட்டாயம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இப்பேரணி அமைந்தது. மேலும் மாணவர்களுக்கு பலவகையான மழை நீர் சேமிப்பு முறைகள் பற்றியும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. தேசிய மாணவர் படை பிரிவின் திட்ட அதிகாரி மேஜர் முனைவர் எஸ். கணபதி இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.











1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    விழிப்புணர்வு மிக மிக அவசியமானது, அதை ஒவ்வொரு வினாடியும் நம் ‎மனதில் நிலைநிருத்தாத வரை நாம் எதையும் சாதிக்க முடியாது.‎

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த உணர்வு வர வேண்டும்.‎

    உங்களின் ஒத்துழைப்புக்கு வாழ்ந்துக்கள் பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.