கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. மழை காலங்களில் வழக்கமாக ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் வகையில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கியது. இதற்காக ஊழியர்கள் கொசு ஒழிக்கும் இயந்திரத்தின் உதவியோடு கொசு மருந்தை அடித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதி சிறிது நேரம் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.
செய்தி மற்றும் படங்கள் :
அதிரை மைதீன்
மாச கடைசி, பில் முழுசா சேரவில்லையாக்கும், அதான் கொசு மருந்து அடிக்கிறீங்களோ, இந்த ஒக்டோபர் மாதச் செலவு எவ்வளவு, இதில் அதிரைக்கு செலவு செய்தது எவ்வளவு, போன்ற விபரங்கள் பொது மக்களின் பார்வைக்கு வருமா?
ReplyDeleteகொசு உறுப்பத்தி பண்ணவைத்து விட்டு இப்போ கொசு விரட்ட நடவடிக்கை , சாக்கடை - குப்பை இவை அகற்றினாலே போதும் கொசு உண்டாகாது. மரங்களை அளித்ததால் வவ்வாக்களும் (இனமே ) அழிந்தது, கொசுவை இயற்க்கை முறையில் கட்டுபடுத்த வவ்வாக்களால் மட்டுமே முடியும்!
ReplyDelete