.

Pages

Wednesday, October 29, 2014

அதிரையில் கொசு மருந்து அடிக்கும் பணி துவக்கம் !

அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் பணி இன்று முதல் துவங்கியது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. மழை காலங்களில் வழக்கமாக ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் வகையில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கியது. இதற்காக ஊழியர்கள் கொசு ஒழிக்கும் இயந்திரத்தின் உதவியோடு கொசு மருந்தை அடித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதி சிறிது நேரம் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.

செய்தி மற்றும் படங்கள் :
அதிரை மைதீன்


2 comments:

  1. மாச கடைசி, பில் முழுசா சேரவில்லையாக்கும், அதான் கொசு மருந்து ‎அடிக்கிறீங்களோ, இந்த ஒக்டோபர் மாதச் செலவு எவ்வளவு, இதில் ‎அதிரைக்கு செலவு செய்தது எவ்வளவு, போன்ற விபரங்கள் பொது ‎மக்களின் பார்வைக்கு வருமா? ‎

    ReplyDelete
  2. கொசு உறுப்பத்தி பண்ணவைத்து விட்டு இப்போ கொசு விரட்ட நடவடிக்கை , சாக்கடை - குப்பை இவை அகற்றினாலே போதும் கொசு உண்டாகாது. மரங்களை அளித்ததால் வவ்வாக்களும் (இனமே ) அழிந்தது, கொசுவை இயற்க்கை முறையில் கட்டுபடுத்த வவ்வாக்களால் மட்டுமே முடியும்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.