.

Pages

Tuesday, October 21, 2014

அதிரையில் கார் டயர் வெடித்து விபத்து ! ஒருவர் படுகாயம் !! [ படங்கள் இணைப்பு ]

அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது யூனுஸ். இவரது மகன் ரபீக் ( வயது 39 ). இன்று மாலை பட்டுக்கோட்டையிலிருந்து தனது வாகனத்தை அதிரையை நோக்கி ஓட்டி வந்துள்ளார். வாகனம் விலாரிக்காடு பகுதியில் வந்த போது வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து சிதறியது. இதில் நிலைகுலைந்த வாகனம் இடது புறத்தில் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் பம்பிங் மோட்டார் கட்டிடத்தில் மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிசென்ற ரபீக்கின் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த அப்பகுதியினர் பலத்த காயமடைந்த ரபீக்கை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து மேற்கோள் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகனம் கட்டிடத்தில் மோதியதில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. மோட்டார் பம்பிங் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். திடீர் விபத்தால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.








3 comments:

  1. சகோ .ரபீக் அவர்கள் பூரண குணமடைய அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்யுவோம் ....வாகங்களில் செல்லும்பொழுது அதன் டயர்கள் வெடிப்பதும் சகஜமே நான் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சென்ற வாகனங்களிலும் டயர்கள் வெடித்து விபத்துக்கள் நிகழ்துள்ளன இருப்பினும் டயர்கள் வெடிக்கும் பொழுது ஓட்டுனர் அதன் வித்தியாசமான சப்தங்களை உணர அதிகம் வாய்ப்புக்கள் உள்ளன இதன் பால் வாகனத்தை slow செய்யும் பட்சத்தில் விபத்துக்கள் தடுக்கப்படலாம் மேலும் இதுபோன்ற சந்தர்பங்களில் ஓட்டுனர் பதற்றத்தில் ப்ரேகே கிற்கு பதிலாக ஆக்சிலரடோர் பெடலை மிதிவிட்டால் அதில் ஏற்படுவதே பேர் விபத்து .

    ReplyDelete
  2. ரபீக் பூரண குணமடைய துவாக்கள்.

    படத்தில் இருப்பதோ சுசுகி வாகனம். ஆனால் செய்தியில் //தனது இன்னோவா வாகனத்தை // என்று உள்ளது.

    //வாகனம் விலாரிக்காடு பகுதியில் வந்த போது //
    விலாரிக்காடு அல்ல, மிளாரிக்காடு

    ReplyDelete
  3. இவர் பூர்ண குணம் அடைய வல்ல இறைவனிடம் து ஆ செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.