.

Pages

Sunday, October 19, 2014

தண்ணீரை சேமிக்கும் மல்டி வாஷிங் மிஷின் ! முத்துப்பேட்டை அருகே மாணவர்கள் அறிய கண்டுபிடிப்பு !!

முத்துப்பேட்டை நாச்சிக்குளத்தில் உள்ள மில்லினியம் மெட்ரிக்குலேசன் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் தினேஷ் குமார், தினேஷ் பாபு, சேக் ஆதில், 7-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ ஆகியோர் 'அறிவியல் புத்தக ஆய்வு விருதுக்காக' சைக்கிளில் உடற்பயிற்சியிலும், குறைந்த செலவில் தண்ணீரை சேமிக்கின்ற வகையிலும் ஒரு மல்டி வகை துணி துவைக்கும் வாசிங் மிசினை கண்டுபிடித்துள்ளனர். இந்த வாசிங் மிசின் கருவியில் ஒருவர் அமர்ந்து சைக்கிள் போன்று காலால் மிதித்தால் தாங்கள் போடப்பட்ட துணிகள் அப்படியே அடித்து துவைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து தரும் வகையிலும், அதன் தண்ணீர் வீணாகாமல் இருக்க தண்ணீரை சுத்தம் செய்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த மாநில அளவில் தேர்வுக்காக இரண்டாம் பரிசு பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது. இந்த கருவிய உருவாக்கிய மாணவர்கள் தினேஷ் குமார், தினேஷ் பாபு, சேக் ஆதில், மாணவி ஜெயஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு பிழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் வழக்கறிஞர் அஷ்ரப் அலி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கரிகாலன், எம்.எம்.எஸ்.அறக்கட்டளையின் தலைவர் காஜா அலாவுதீன், பள்ளியின் முதல்வர் உதயா, துணை முதல்வர் அன்னப்பூரனி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை,
முத்துப்பேட்டை

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இவர்களின் கண்டுபிடிப்புக்கு இப்போது சாதாரணமாக தெரியாலாம், ஆனால் ‎இது சாதாரணமாக போய்விடாமல் பாதுகாப்பது சமுதாயத்தை சேரும்.‎

    இது பாதுகாக்கப்பட்டு நெறிப்படுத்தனும்.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. இளம் அறிவியல் வல்லுனர்களை .ஊக்கப்டூத்த நம் எல்லோரும் அவர்களுக்கு உற்ற நண்பர்களாக இருப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.