ஒன்று சுயபுத்தி இருக்க வேண்டும் அல்லது சொல்புத்தியாவது இருக்க வேண்டும் இந்த இரண்டுமில்லாமல் துபைக்கு வந்துள்ள மரமண்டைகளுக்கு துபை சட்டங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
மில்லியன், பில்லியன் திர்ஹங்கள் என கொட்டி கார் வாங்கியவெரல்லாம் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடைய படைத்தவன் துணையோடு கார் ஒட்டுவதை கண்ணில் பார்த்த பிறகும் இந்த சரக்கு வேனை எலுமிச்சை பழத்தையும் பச்சை மிளகாயையும் நம்பி வண்டி ஒட்டுகிறவரை என்னவென்று சொல்வது? தமிழன் என்று சொல்லத்தான் முடியுமா அல்லது தலைநிமிர்ந்து நிற்கத்தான் முடியுமா ?
பான் போட்டு துப்பினால் 1000 திர்ஹம் அபராதம் எனும் கடும் சட்டம் அமலில் உள்ள நிலையிலும் சர்வ சாதாரணமாக தெருவில் அமர்ந்து கொண்டு பான் விற்கும் பெங்காளிகளின் ஒரு கூட்டமே உள்ளது, இங்கே சாம்பிளுக்கு இருவர்.
கடின உழைப்பாளிகள் நிறைந்த பங்களாதேஷிலிருந்து தான் இந்த கருங்காலிகளும் வந்துள்ளார்கள். சீக்கிரம் பணக்காரனாக 3 சீட்டு சூதாட்டம் போன்றதொரு ஒருவகை சூதை விளையாடுகின்றனர். கஸ்டமர்கள் சர்வமத இந்தியா, பாகிஸ்தான், பெங்காளி, ஸ்ரீ லங்கா போன்ற தெற்காசியாவினர் தான்.
நேற்றிரவு (17.10.2014) சுமார் 8 மணியளவில் பர்துபை மெட்ரோ ஸ்டேசன் அருகில் செல்லும் போது இந்த கருமத்தை காண முடிந்தது. மம்முட்டி என்ற நடிகனின் படம் நேற்று ரிலீசாம் அதற்காக இந்த ரசிக பேக்குகள் தியேட்டர் முன் பேண்டு வாத்தியங்களுடன் ஆடிய குத்தாட்டத்தை பார்த்து பிற வெளிநாட்டினர் 'பின்னால்' சிரித்துக் கொண்டு போனார்கள். மலையாளிகளின் பெயரை கெடுக்க இப்படியும் பல மடையர்கள் உண்டு என்பதை தெரிந்து கொண்ட நாள் நேற்று.
வேதனையுடன்
அதிரை அமீன்
சிறந்த புலனாய்வு !
ReplyDeleteகுடும்ப சூழலால் கடல் கடந்து பொருள் ஈட்ட போகும் இவர்கள் வழிதவறி சமூக விரோத செயலில் ஈடுபட்டு தன்னையும் தன் குடும்ப மானத்தையும் இழக்கின்றனர். இனிமேலாவது இவர்கள் திருந்த வேண்டும்.
இந்த பகுதிகளில் காவல்துறை ரோந்து அதிகப்படுத்த வேண்டும்.
சகோ.அமீனின் வேதனை நியாயமானதே! இன்னும் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்.
ReplyDeleteஆமா இங்கே சட்டம் ரொம்ப கடுமை இல்லைதான்???????
Deleteஅபூபக்கர் காக்கா எந்த வூரில் இருக்கிறிய?
அமீன் காக்காவின் கேமராவிற்கு,
ReplyDeleteஇரவு எட்டுமணிக்கு மேல் நடக்கும் நல்லது கெட்டது எதுவும் உங்கள் லென்சிற்கு புலப்படவில்லையா?
இன்னும் துபாய் பழையதுன்னு நினைக்காதிங்க, புது துபாய். Western Life style இங்கே உண்டு, சவுதி, குவைத்தில் 10 நாள் லீவு விட்டா அரபுக்காரன் இங்கே தான் வர்றான். சுற்றுலா தளமாக மாறிவிட்டது, வசதி உள்ளவன் ஹோட்டலில் கும்மாளம் போடுறான், இல்லாதவனுக்கு சொல்லவா வேண்டும்?
ReplyDeleteகுறிப்பிட்ட இடத்துக்குள் அவரவர் சமூக வழிபாடு, விழா பேணலாம், ரஹ்மான் கச்சேரின்னு சொன்னா டிக்கெட் அட்வான்ஸ் புக் பண்ணி விடிய விடிய கச்சேரி பார்த்து ரசிப்பது நம்ம மக்க தான்.
எல்லாம் நடக்குது, காதை பொத்திக்கொண்டு தான் போக வேண்டும்.
கடல் கடந்து வாழும் மக்களை பற்றி கவலை கொள்ளும் அதிரை மக்களே கண்ணுக்குமுன் நம் நாட்டில் அதுவும் தமிழ் நாட்டில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றி அதுவும் சிறுபான்மை மக்களை திட்டமிட்டு கொலை செய்வதை பற்றியும் அனைத்து மக்களும் அமீனும் வேதனை கொள்வதை விட அல்லாஹ் விடத்தில் துவா செயவும் 1.திருச்சி பள்ளிமாணவி கற்பழித்து கொலை .2 .s p பட்டினம் துப்பாக்கி சூடு 3.ஆனந்தூர் காவலர் சர்மிளா இப்படி பட்டியல் நீண்டுகொண்டு போகும் ,இதனை சமுதாய கட்சிகள் இருந்தும் இஸ்லாமிய சமுதாயத்துக்கு என்னபயன் 24 கட்சிகள் இஸ்லாம் எனும்போது ஓன்று கூடவிலையே ஏன் ?
ReplyDeleteவிவேக் காமடி தான் நினை விற்கு வருகிறது, .எப்போது திருந்துவார்கள்.என்பது தான் தெரியவில்லை. .இன்னும், இது போல் வேறு வேதமான செயல்கள் செய் வதையும் .நாம் கண்டு கொண்டோ தான்.இருக்கிறோம். என்ன செய்வது.எப்போது ஆறாவது வேலை செய்யும் என்று தெரியவில்லை. பொறுப்போம்.
ReplyDeleteமக்களுக்காக வேதனை அடைய ஒருவர் இருப்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்குது. அரபு நாடுகளை கேள்விப்பட்டதோடு சரி, போனது கிடையாது, கேள்விப் பட்டவகையில் அரபு நாடுகளிலே சவூதியை தவிர மற்ற நாடுகள் படு மோசம் என்றும் பஹ்ரைன் மிக மிக மோசம் என்று, துபாய் சொல்லவே தேவை இல்லை என்றும் செய்திகள் வருதே அவ்வளவும் உண்மையா? தொபாய்லே எல்லாமே கிடைக்குமாமே, அந்த நாடு நல்லவனுக்கு நல்ல நாடாம், கெட்டவனுக்கு கெட்ட நாடாம். நம்ம ஊரு பிள்ளைக ரொம்ப நல்லவங்களாச்சே.
ReplyDeleteகுடும்ப சூழலால் கடல் கடந்து பொருள் ஈட்ட போகும் இவர்கள் வழிதவறி சமூக விரோத செயலில் ஈடுபட்டு தன்னையும் தன் குடும்ப மானத்தையும் இழக்கின்றனர். இனிமேலாவது இவர்கள் திருந்த வேண்டும்.
ReplyDeleteதுபையில் நடக்கும் இத்தகைய சம்பவங்களை நச்சென்ற புகைப் படத்துடன் வெளிச்சமிட்ட உங்களது உவமை வரிகளில் அழகாக சொல்லியுள்ளீர்கள். அருமை.
ReplyDeleteதுபையை பொருத்தமட்டில் பாலும் விஷமும் பகிரங்கமாக வைக்கப் பட்டுள்ளது. பகுத்தறிவு மனிதனுக்கு எதைக் குடித்தால் நல்லது என்று தெரியும். நாட்டைக் குறை கூறுவதை விட நமக்கு மனக் கட்டுப் பாடு வேண்டும். சிந்தித்து செயல்படவேண்டும்.
இஸ்லாமிய சட்டம் கொண்டு வந்து அதை துபாய் நடை முறை படுத்த வேண்டும்.
ReplyDeleteபணம் மாயம்செய்து விட்டது பாவம் அரபு விதிவிலக்கா என்ன? ஆம் சுற்றுலா தலம் தான் அன்னிய மேற்கத்திய கலச்சாரம் கறைபுறண்டு ஓடுகின்றதல்லவா! ஆக்கத்திற்க்கு நன்றி்
ReplyDeleteகுற்றங்கள் ஒழிக்கப்பட இஸ்லாமிய குற்றவியல் சட்டமே ஒரே தீர்வு.அத்தகைய சட்டம் இல்லையே அமீரகத்தில்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அன்றைய நாட்களில் வெளிநாடு சபுறு என்றால் அது சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு இப்படி இருந்தது, ஊருக்கு வரும்போது, குடை, பனியன், டார்ச் விளக்கு, இப்படியான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வருவார்கள்.
இன்றைய நாட்களில் வெளிநாடு சபுறு என்றால் அது உலகம் விரிந்ததாக இருக்கின்றது. ஊருக்கு வரும்போது வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கி வராமல், தேவையற்ற சாமான்களை வாங்கி வருகின்றனர்.
வெளிநாட்டு சபுராலிகளே சிந்த்தித்து செயல்படுங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com