.

Pages

Sunday, October 26, 2014

செடியன் குளத்தை கண்டுகொள்ளாத சமூக ஆர்வலர்கள் !

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இந்தப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட இந்த குளத்தால் இந்த பகுதியின் நீர்மட்டம் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல் இக்குளத்தில் நீராடுவோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது, இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் இந்த பகுதியை சுற்றி ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீர் குளத்திற்கு வந்தடைந்தது. இதனால் குளத்தில் சிறிதளவு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரிக்கு ஆற்று நீர் வந்ததை அடுத்து தற்போது இரு ஏரிகளும் நிரம்பி வழிகிறது. ஏரியிருந்து நிரம்பி வழியும் நீரானது பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, பள்ளி ஆகியவற்றை ஒட்டியுள்ள சாலையோரத்தின் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால் வழியாக கடலுக்கு சென்று வீணாக கலக்கிறது. எதற்கும் பயன்படாமல் வீணாக கடலுக்கு செல்லும் நீரை, வாய்க்காலிலிருந்து குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை சீரமைத்து அருகில் காணப்படுகின்ற குளங்களுக்கு மோட்டார் பம்பிங் மூலம் நிரப்பிக்கொள்ள அதிரையில் வாழும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபட முன்வர வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக அதிரையில் பொய்த்து போன மழையால் மக்களுக்கு பயன்தரும் இந்த வாய்க்காலின் இணைப்பில் உள்ள ஏனைய குளங்களாகிய கீழத்தெரு செயனாங் குளம், ஆதம் நகர் குட்டை குளம், கடற்கரைதெரு குளம் ஆகியன போதுமான நீரின்றி காணப்படுகிறது. இவற்றிலும் முழுமையாக நீரை நிரப்பவதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும்.

கடந்த சில நாட்களாக அதிரையில் போதுமான மழை பெய்தும் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள், தேவையான வாய்க்கால் சீரமைப்பு இல்லாததால் மழைநீர் அனைத்தும் வீணாகிறது. ஏரி வாய்க்கால் வழியாக இன்னும் சில தினங்களுக்கு தண்ணீர் தொடர்ந்து வர இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அருகில் காணப்படும் குளங்களுக்கு ஏரி நீரை கொண்டுவர சமூக ஆர்வலர்கள் ஏன் முயற்சிக்க கூடாது ?

செடியன் குளத்திற்கு இறைவன் அனுப்பி வைத்த மழை நீர்



ஏரியிலிருந்து நிரம்பி வழியும் நீர்,

எதற்கும் பயன்படாமல் வீணாக கடலில் சென்று கலக்கும் காட்சி




9 comments:

  1. Thaneerukaha mazhai tholugai vaitha adiraiyil mazhai neer kadalil kalapathu vethanai alikirathu

    ReplyDelete
  2. வருத்தமான விஷயம் தான்.இருப்பினும் ஊரில் உள்ள அரவம்மிக்க சமூக ஆர்வலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், வசதி படைத்தவர்கள் மற்றும் எரிபுரைகரை ஊராட்சி நிர்வாகளுடன் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் கலந்து ஆலோசித்து வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீரை செடியான் குலத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கலாம். முயற்சி வெற்றியை தரும்

    ---முபீன்

    ReplyDelete
  3. ஊரே மழை வெள்ளத்தில் மிதக்க, பாரம்பர்யமிக்க ஒரு குளம் தண்ணீருக்காக ஏங்குவது வருத்தமான செய்தி,

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரண்டிருந்த அதிரையின் சில குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவர சில சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் முயற்சி மேற்கொண்டபோது, அதுவரை எதுகுறித்தும் கவலையில்லாமல் அமைதி காத்த சிலர் போட்டி மனப்பான்மையுடன், ஒரு குறிப்பிட்ட குளங்களுக்கு முதலில் தண்ணீர் செலவதை அறிந்து அதற்கு தடை விதிக்க நின்றதும், இதனால் எந்த குளத்திற்கும் தண்ணீர் கிடைப்பது தடைபட்டு ஈகோ வென்றதும் ஊரில் உள்ள யாராலும் மறக்க முடியாது.

    சிறுதுளி பெரு வெள்ளம் போல், அப்போது ஒவ்வொன்றாக குளங்களை நிறைத்திருக்கலாம், அல்லது நிறைந்த குளம் போக மீதமுள்ள குளங்களுக்கு இப்போதாவது நிறைத்திருக்கலாம்.

    போட்டி மனப்பான்மையுடன் தங்களையும் சமூக ஆர்வலர்கள் என்று காட்டிக் கொண்டு நின்றவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? ஏன் அவர்கள் இப்போது இந்த பாரம்பர்யமிக்க குளத்தை நிரப்ப கச்சை கட்டி நிற்கக்கூடாது?

    சமூக அக்கரை என்பது ஒரு சாராருக்கு மட்டும்தான் என்று எழுதி வைக்கப் பட்டுள்ளதா? எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், அனைத்து குளங்களும் நிரம்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏன் நம்மூரில் அற்றுப் போயினர்?

    செடியன் குளம் ஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டும் சுத்தம் செய்த குளமல்ல. ஊரின் அனைத்து தரப்பினரையும், அனைத்துப் பகுதி மக்களையும் சுத்தம் செய்த குளம்,
    ஊரே வரண்டிருந்தாலும், இந்த குளம் வரண்டுபோகாது. அப்படிப்பட்ட குளம் தண்ணீர் தாகத்தில் ஏங்குவது வேதனை அளிக்கும் தகவல்.

    இந்த குளத்தின் மீது கருணை காட்டுங்கள் தன்னார்வலர்களே!! இதில் ஈகோ பார்க்காதீர்கள்

    ReplyDelete
  4. Ethakku Anna karanam
    i kkeya jamath muyarchche
    pannalam alla à?

    ReplyDelete
  5. நன்றியுள்ள நமதூர்வாசிகள் யாரும் செடியன்குளத்தை அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள். காரணம் ஒருகாலத்தில் ஏழை பணக்காரர்கள் எல்லா தரப்பினருக்கும் வறட்சியான காலத்தில் கூட வற்றாத அமுத சுரப்பியாய் இருந்து அனைத்து தரப்பினரின் புழக்கத்திற்க்கான தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்து கொடுத்த குளம். இன்று கவனிக்க ஆதரவற்று நிராதறவாக நிற்ப்பது வேதனைக் குரிய விஷயம்தான்.

    மற்ற குளங்களுக்கு தண்ணீர் வர அக்கறை செலுத்துவது போல சமூக ஆர்வலர்கள் தெருத் தலைமையில் உள்ளவர்கள் முஹல்லாவாசிகள் அனைவரும் சேர்ந்து செடியன்குளத்தின் மீதும் பார்வையைத் திருப்பினால் இக்குளத்தினை அழிவிலிருந்து காப்பாற்றலாம்.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    சிந்திக்க வேண்டிய விஷயம், அதிரையில் உள்ள எல்லாக் குளங்களும் ‎நிறைய வேண்டும், அதற்க்கு அதிரையர்கள் எல்லோரும் ஒத்து நின்று ‎செயல்பட வேண்டும்.‎

    சும்மா ஓசர வார்த்தைக்கு சொல்லுவதில் பலன் இல்லை. ஆகவே நம்மில் ‎நாம் எப்படி இருக்கின்றாம்?‎

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல் !?‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  7. நம்ம ஊரே எங்கு போய் சேர்ப்பது?‎

    எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் கன கச்சிதமாக ஒற்றுமையோடு இருப்பது ‎விருந்தில் மட்டும்தான்.‎

    மரண அறிவிப்பு வந்தால், எந்த தெரு மையித்து என்று பார்த்து “இன்னா ‎லில்லாஹி” சொல்ற ஆட்கள் இங்கு உண்டு.‎

    ஒரு நேரத்தில் அதிரை மக்கள் அனைவரும் நன்றாக குளித்து மகிழ்ந்த குளம் ‎இந்த செடியன் குளம்.‎

    நம்ம மக்கள் நன்றியை மறப்பவர்கள் இல்லை,‎

    ReplyDelete
  8. //மரண அறிவிப்பு வந்தால், எந்த தெரு மையித்து என்று பார்த்து “இன்னா ‎லில்லாஹி” சொல்ற ஆட்கள் இங்கு உண்டு.‎//

    100 சதவீதம் சரி.. இந்த விசயத்திலேயே பாகுபாடு பார்க்கிறவங்கள் பொது விசயத்திலே எப்படி இருப்பாங்க?

    ReplyDelete
  9. கோடை காலத்தில் ஊரில் உள்ள குளங்களில் தண்ணீர் வற்றினாலும் இங்கே தண்ணீர் இருக்கும் அதனால் எல்லா மக்களும் சங்கமம் ஆகும் இடம் என்று சொல்லலாம், குலத்தை சுற்றி மரங்கள், பறவைகளின் சப்தம் என்று காட்சியளித்த குலமா இது? மக்கள் தங்கள் இல்லத்தில் குளிப்பதால் இதனை மறந்தார்களோ என்னவோ. வரலாற்று சிறப்புமிக்க இக்குளம் புத்துயிர் பெறுமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.