இதுகுறித்து பல்வேறு தரப்பிலும் நெடுஞ்சாலை துறையினரிடம் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது. சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தனர். அதன்படி கடந்த [ 27-10-2014 ] அன்று பழுதடைந்த பேருந்து நிலைய பகுதியை நேரடியாக பார்வையிட்டனர். அன்றைய தினம் அதிரையில் மீண்டும் கனமழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்துள்ள பேருந்து நிலைய பகுதியை சீரமைப்பு செய்வதில் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில் இன்று காலை நெடுஞ்சாலை துறையினர் குண்டு குழியுமாக காட்சியளித்து வந்த பேருந்து நிலைய பகுதி சாலையின் பள்ளமான பகுதியில் 'டஸ்ட் கிராவல்', ஜல்லி கொட்டி நிரப்பினர். இது ஒருபுறமிருக்க அதிரை பேரூராட்சியின் சார்பில் பேருந்து நிலையத்தை சுற்றி மழைநீர் தேங்காமல் இருக்கவும், சீராகச்செல்வதற்கும் வடிகால் வசதி செய்யப்பட்டது. இதற்காக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தூர் வாரப்பட்டது. பணிகளை அதிரை பேரூராட்சி தலைவர், துணை தலைவர், செயல் அலுவலர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அட! அட!! அடா!!!
என்ன அருமையான விரைவு பணி, புகைப்படங்களை பார்க்கும்போதே கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல் இருக்கே.
இப்படியே சிறுக சிறுக சரிசெய்து இந்த ஊரையே சரிசெய்து விடலாம் போல் இருக்கே, பார்த்தீங்களா முடிந்தால் முடியாதது என்று காட்டிவிட்டீர்கள்.
உங்களின் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
அதிரை பேரூர் மன்ற தலைவர் தம்பி அஸ்ஸலாம் மற்றும் துணைத்தலைவர் சகோ .பிச்சை இவர்கள் முறையே தமிழ் நாட்டின் பிரதான ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியென மாறி மாறி வரும் தி மு க மற்றும் அ தி மு க கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் சமீப காலங்களில் இவர்கள் அதிரை நலுனுக்காக கட்சியின் பாகுபாடின்றி இரவு பகல் பாராது ஊருக்கு மிக நல்ல காரியங்களை செய்துவருவது தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு முன் மாதிரி மேலும் இவர்களின் மக்கள் பணி அதிரை வரலாற்று சுவடுகளின் சிகரம் என்றே சொல்லலாம் ....வாழ்த்துக்கள் ....
ReplyDeleteசெட்டியார்குளம் கிழக்கு கரை புதுப்பள்ளி செல்லும் ரோடு முன்பு செட்டியாகுளம் சுத்த செய்யபட்டபோது அதிகம் கனரக வாகனங்கள் சென்று பழுதாகி உள்ளது அதை சீர் செய்ய வேண்டுகிறேன் மேலும் அந்த இடத்தில் முறையான குப்பை தொட்டி ஒன்று பெரிதாக கட்டி தரவும் ஏற்பாடு செய்தால் செய்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த குறுக்கு பாதை சீர்படும் .
பேரூராட்சி சுற்றி தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, ஊரின் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பது இவங்களுக்கு தெரியலையா? தனக்கு வேண்டிய பகுதி சீரமைக்க மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு கொடுப்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்?
ReplyDeleteநெடுஞ்சாலை துறை மேற்கொண்ட துரித நடவடிக்கை வரவேற்க வேண்டியவை - வாழ்த்துக்கள்; அப்படியே ECR ரோட்டின் சாலை ( இருபுறம் ) சரி பண்ணிடுங்க!