கடந்த சில
மாதங்களாக அதிரைப்பகுதியில் அடிக்கடி மின் தடங்கல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும்
அவதிக்கு உள்ளாகுகின்றனர். காரணம் கேட்டால் 33கே.வி. மின் பாதையில் பிரச்சனை.
33கே.வி. மின் பாதை ஒரு சிறப்புப் பார்வை.
மதுக்கூர்-வாடியகாடு துணை
மின் நிலையம் திறன் (110/33/11)கே.வி. / அதிராம்பட்டினம் துணை மின் நிலையம் திறன் (33/11)கே.வி.. இவ்விரண்டு துணை மின் நிலையங்களையும் இணைக்கும் மின்
பாதையே 33கே.வி.
மின் பாதையாகும்.
இது யாரால், எப்படி, எவ்வாறு நிறுவப்பட்டது.
1977களில் தமிழக முதல்வராக இருந்தவர் மறைந்த மக்கள் திலகம் MGR ஆவார்கள், அதே
நாட்களில் அதிரை நகர தலைவராக (PRESIDENT) இருந்தவர், மறைந்த
(மர்ஹூம்) M.M.S. சேக்தாவூது மரைக்காயர்
ஆவார்கள்.
இவர்கள் இரண்டு பேருடைய
முயற்ச்சியில் அன்று 1977களில் (WATER BOARD) குடிநீருக்காக மதுக்கூர்-வாடியகாடு துணை மின்
நிலையத்திலிருந்து அதிரை குடிநீர்
பகுதியான மிலாரிக்காடு பம்பிங் ரூமுக்கு தனியாக 11கே.வி. திறன் கொண்ட ஒரு மின் பாதையை நிறுவி. “நகரில் மின்சாரம் இல்லா விட்டாலும்”, குடிநீருக்கு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மின்
பாதையை நிறுவி அதிரை மக்களுக்கு குடிநீரை தடை இல்லாமல் விநியோகம் செய்து
வந்தார்கள்.
அந்த நாட்களில் வீடு, கடை, தொழில்
நிறுவனம், அரவை ஆலைகள், விவசாயம், குடிநீர் போன்றவற்றிற்கு பட்டுக்கோட்டை துணை
மின் நிலையத்திலிருந்து 11கே.வி. திறன் கொண்ட மின் பாதையை நிறுவி நமதூருக்கு மின் விநியோகம்
செய்யப்பட்டது. இந்த மின் பாதையில் அடிக்கடி மின் தடங்கல் ஏற்பட்டு வந்ததின்
காரணமாக மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது, இதன் காரணத்தினாலேயே அன்றைய
நமதூர் நகர தலைவர் (மர்ஹூம்)M.M.S. சேக்தாவூது
மரைக்காயர் அவர்கள் அன்றைய தமிழக முதல்வர் M.G.R அவர்களை சந்தித்து நமதூருக்கு மேலே சொல்லப்பட்ட “மதுக்கூர்-வாடியகாடு
துணை மின் நிலையத்தில் இருந்து” 11கே.வி திறன் கொண்ட மின் பாதையை
நிறுவி அந்த மின்சாரத்தின் இயக்கத்தை கொண்டு தடையில்லாமல் குடிநீரை வழங்கினார்கள்.
காலப்போக்கில் அதிரை நகர்
வெகுவாக விரிவடையத் தொடங்கியதாலும், இதன் காரணமாக பட்டுக்கோட்டையில் இருந்து
பெற்றுவந்த மின்சாரம் நகர் முழுக்க சீரான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடியாமல்
போனதினாலும், ஆறுமணிக்கெல்லாம் லோ வோல்டேஜ், பள்ளி மாணவ மாணவிகள் இரவில்
படிப்பதற்கு மிகவும் சிரம், இரவு நேரங்களில் சாலைகளில் விளக்குகள் எரியாது, காரணம் லோ வோல்டேஜ், இப்படி பல பிரச்சனைகள் அன்று
அதிரை மக்களை சூழ்ந்துகொண்டு பாடாய் படுத்தியது. சில வீடுகளில் ஸ்டெப்லைசர் உதவி
கொண்டு சீரான மின்சாரத்தை பெற்று வந்தனர். பல இன்னல்களுக்கு மத்தியில் அன்று நமதூரைச்
சேர்ந்த பலருடைய கடினமான முயற்ச்சியின் பலனாக நமதூரில் ஒரு துணை மின் நிலையம்
அமைக்க ஏற்பாடுகள் நடந்தது.
ஆகவே, 1995களில் நமதூர் 33/11கே.வி. திறன் கொண்ட துணை
மின் நிலையம் பெறுவதற்கான அந்தஸ்தை
பெற்றது.
முன்னதாக பட்டுக்கோட்டையில்
இருந்து பெறப்பட்டு வந்த 11கே.வி. மின் பாதை நிறுத்தப்பட்டது. மதுக்கூர்-வாடியகாடு துணை மின் நிலையத்தில்
இருந்து குடிநீருக்காக நிறுவப்பட்ட 11கே.வி. திறன் கொண்ட மின் பாதையை 33கே.வி. திறன் கொண்ட மின் பாதையாக தரம் உயர்த்தப்பட்டு, அதை அதிரை துணை மின்
நிலையத்தில் இயக்கி அதில் இருந்து பெறப்படும் 11கே.வி. திறன் கொண்ட மின்சாரத்தை அதிரை நகர் பகுதிகளில் அந்தந்த இடத்தில் மின்
மாற்றிகளை(Transformer) நிறுவி வீடு,
கடை, தொழில் நிறுவனங்கள், அரவை ஆலைகள், விவசாயம், குடிநீர் போன்றவற்றிற்கு மின்சாரத்தை
விநியோகித்து வருகிறது தமிழ்நாடு மின்சார வாரியம், இன்று வரை அப்படித்தான் நடந்து
வருகின்றது.
அன்று 1995களில் நமதூரில் நிறுவப்பட்ட
துணை மின் நிலையத்தினால் மின்சாராம் இஷ்டம் போல் கிடைத்தது, லோ வோல்டேஜ் என்ற
சொல்லுக்கே இடம் இல்லாமல் இருந்தது, ஸ்டெப்லைசர் எல்லாம் இரும்பு கடையை நோக்கி படை
எடுத்தது. அதிரை நகர் மின் ஒளியில் பிரதிபலித்தது. எந்த நேரத்திலும் வோல்டா
மீட்டர் கொண்டு மின்சாரத்தை அளந்தாலும் 220-240வோல்ட் மின்சாரம் சீராக கிடத்தது வந்தது. மின் தடங்களே இல்லாமல் இருந்தது.
இன்று எப்படி?
(2014) இப்போ அடிக்கடி மின் தடங்கல், ஏன் என்று கேட்டால் 33கே.வி மற்றும் 11கே.வி. மின் பாதையில் பிரச்சனை, ஊருக்குள்ளே பல மின் மாற்றிகளுக்குள் பல
பிரச்சனைகள், மின் கம்பிகள் பிரச்சனை, மின் கம்பங்கள் பிரச்சனை, மழை, காற்று,
மரங்கள், தென்னை ஓலை, பனை மட்டை. ஆந்தை, காகம், அட அட டா என்னங்கப்பா இது?
தமிழ்நாடு மின்வாரியத்தை பார்த்து
கேட்கின்றேன்.
மழை பெய்யத்தான் செய்யும், காற்று
அடிக்கத்தான் செய்யும், தென்னை ஓலை, பனை மட்டைகள் காற்றில் அங்கும் இங்கும் பறக்கத்தான்
செய்யும், காகங்கள், ஆந்தைகள் இவைகளெல்லாம் பறக்கும், உங்களுடைய மின் பாதைகளை
சீராக வைத்துக்கொள்ளாத வரை இந்தப் பிரச்சனை ஒருக்காலும் நீங்காது, மேலும் உங்களிடம்
பத்தாயிரம் ஆட்கள் பணியில் இருந்தாலும் ஒரு பலனும் இல்லாமல் போகும்.
அதிரை மின்சார வாரியமே, நீங்கள்
செய்ய வேண்டியது இதுதான்.
இரண்டு மாத
காலத்திற்கு உங்களுடைய ஆட்களை வைத்து போற்கால நடவடிக்கையில் இறங்கி அதிரையில் உள்ள
அனைத்து பகுதிகளிலும், மூளை முடுக்கெல்லாம் சென்று, எல்லா மின் மாற்றிகளையும், எல்லா
மின் பாதைகளையும், எல்லா மின்கம்பி இணைப்பு மற்றும் ஜம்பர்களையும், எல்லா இன்சுலேட்டர்களையும் சரிசெய்ய
வேண்டும். மேலும் மதுக்கூர்-அதிரை 33கே.வி. மின் பாதையையும் சரிசெய்ய
வேண்டும். மேலும் உங்களுடை லைன் இன்ஸ்பெக்டர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக சென்று
மின் கம்பிகளை ஆய்வு செய்ய வேண்டும், மின் கம்பியில் ஏற்பட்ட குறைகளை முழுமையாக
நீக்க வேண்டும். இப்படி அவரவர் வேலைகளை அவரவர் செம்மையாக செய்தால் எல்லா
பிரச்சனைகளும் நீங்கிவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
இது மனித உரிமை மக்கள்
பாதுகாப்பு இயக்கம், அதிரை மின் நுகர்வோர்கள், பொதுமக்கள் சார்பாக எழுதப்பட்டதாகும்.
பொது
மக்களுக்கு உண்டான குறிப்பு:- பல நாட்கள் கடும்
முயற்ச்சிக்குப் பின் நமதூர் தற்போது 110/33/11கே.வி. திறன் கொண்ட துணை மின் நிலையத்திற்கு தகுதி அடைந்து விட்டது. கூடுதல்
இடம் தேவைப்படுவதால் இடம் தேடப்பட்டு வருகிறது. இது குறித்து நமது இந்த
வலைதளத்தில் “அதிரையின் அந்தஸ்து 110/33/11”. என்ற தலைப்பின் ஒரு பதிவையும் பொதுமக்கள் கவனத்திற்கு
பதிந்து இருந்தோம். (ஒரு புள்ளேகூட வாயே
திறக்கலே)
அந்த லிங்க்.
http://www.adirainews.net/2014/10/1103311.html
மின்
வாரியத்துக்கு உண்டான குறிப்பு:- தமிழ்நாடு மின் வாரிய
அதிரை மின் விநியோக பகுதியே, இதற்கு பிறகும் உங்களிடம் இருந்து எந்த விதமான
நடவடிக்கை எடுக்கப்படவில்லையாயின், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச்
செல்லப்படும் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரியப்படுத்துகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and
Consumer Rights Included.
Thanjavur District Organizer.
Adirampattinam-614701.
Jamal kaka please follow up
ReplyDeleteசரியான விழிப்புணர்வு ஆக்கம், தூக்கம் கலைய வேண்டும் மின்சார வாரியத்திற்கும் நம் அதிரையர்களுக்கும் தான்.
ReplyDeleteஜமால் காக்காவிற்கு நன்றி. நெத்தியடி விழிப்புணர்வு கட்டுரை, அதிரைமக்கள் அனைவரும் ஒன்று சேரசேரவேண்டும், மின் பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட வேண்டும். காக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுங்கள்.
ReplyDeleteஉன் குத்தமா என் குத்தமா யார் நானும் குத்தம் சொல்ல..நிதி ஒதுக்கி ஆட்டையபோட்ட அரசியல்வாதியயா? ,செயல்படுத்த தவறிய அதிகாரிங்களயா?, இல்லா வரிப்பணம் கட்டும் தட்டிக்கேட்கும் முழு உரிமையும் கொண்ட நம்ம மக்கள சொல்றதா..சொல்லுங்கலேன் சொல்லுங்க
ReplyDeleteமசாலா அரைக்க அம்மி பயன்படுத்தியதால் அன்று உபரியாக மின்சாரம் இருந்தது இன்று இலவசத்தை கொடுத்து மக்களை சோம்பெரியக்கியதுமட்டுமல்லாமல் மின்சாரம் தட்டுபாடு ஏற்படக் இதுவும் ஒரு காரணம்.
நாளை மழை வருமா வராதான்னு ரமணன் சொல்லுவது போல நீங்களும் நாளை மின்சாராம் உண்டா இல்லையான்னு சொல்லுறீங்க -சந்தோசம்.
இப்பிரச்சனைக்கு முடிவு மக்கள் கையில் தான்...... என்றைக்கு தீர்வு வருமோ?
உங்கள் விடா முயற்சி வெற்றியைச் சுவைத்தே தீரும்.
ReplyDeleteஜமால் காக்காவின் இந்த ஆதங்கம் மற்றும் ஆக்கம் துண்டு பிரசுரமாக வெளியிட்டால் நலம் .
ReplyDeleteஜமால் காக்காவின் இந்த ஆதங்கக் கட்டுரையை அதிரையர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஜமால் காக்காவுடன் கைகோர்த்து ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது.
ReplyDelete//தமிழ்நாடு மின் வாரிய அதிரை மின் விநியோக பகுதியே, இதற்கு பிறகும் உங்களிடம் இருந்து எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையாயின், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரியப்படுத்துகின்றேன்.//
ReplyDeleteநண்பர் ஜமால் அவர்களே! நல்லதொரு ஆக்கம் இது. காயை நகர்த்துங்கள், என்னால் ஆன ஆதரவை தங்களுக்கு இந்த விஷயத்தில் அளிக்கிறேன். சகோதரர் Abubacker, Can . சொல்வதுபோல் இந்த ஆக்கத்தினை துண்டு பிரசுரமாக வெளியிட்டால் நம் மக்களிடையே மின்சார வாரியம் பற்றிய விழிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம் நம்மவர்கள் அனைவரும் இந்த ஆக்கங்களை படிக்க வாய்ப்பில்லை.
உங்களின் கருத்துக்கு நன்றி.
Deleteஉண்மையாக இது எல்லோரையும் சென்றடைய வழி வகுப்பதோடு, நடவடிக்கையும் எடுக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
இந்த ஆக்கத்தை உநிடேது பௌண்டடின் என்ற குரூப் messaging சிஸ்டம் Telegram சாப்ட்வேர் மாறலாக அனுப்பலாமே. இந்த UF குரூப்பில் 200க்கும் மேற்பட்டவர்கள் மெம்பராக இருக்கிறார்கள், பல நல்ல தகவல்கள் பரிமாரிகொள்ளப்படுகிறது. Android போன் வைத்திருப்பவர்கள் இந்த க்ரூபில் சேரலாம்.
Delete