.

Pages

Wednesday, October 29, 2014

அதிரையில் மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பகுதிகளில் செயல்படுத்தி வரும் 'பம்பிங் ஸ்கீம்' திட்டம் குறித்து ஆய்வை மேற்கொள்வதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. சுப்பையன் இன்று காலை வருகை தந்தார். அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று ஆய்வை மேற்கொண்டார். அதிரை சுற்று வட்டார பகுதியின் வரைபடத்தை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து நீர் நிரம்பிய குளங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

ஆற்று நீர் வருகையின் தற்போதைய நிலவரம், அதிரை குளங்களுக்கான நீரின் தேவை, அடைப்புகள் ஏற்பட்டுள்ள வாய்க்கால் தூர்வாருதல், மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்தல், நீர் நிரம்பாத பிற குளங்களுக்காக அதிரை பகுதிகளுக்கு வழங்கி வரும் ஆற்று நீரின் கால அவகாசத்தை நீட்டிப்பு செய்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் முன் வைக்கப்பட்டது. இவற்றை அனைத்தையும் பரிசிலிப்பதாக கூறியிருக்கிறார்.

அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதை யொட்டி தற்போதை நீர்மட்டம் 110 அடிக்கு வந்துள்ளது என்றும், மேலும் மழை அதிகரித்தால் நீர்மட்டத்தின் அளவு உயரக்கூடும் என பேசப்பட்டது. ஆய்வின் போது பொதுப்பணி துறை அலுவலர்கள், பேரூராட்சி துறை அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

களத்திலிருந்து அதிரை மைதீன்











13 comments:

  1. நமது ஊர் நலத்திற்கு வேண்டி பாடு படும் அனைவருக்கும் பாராடுக்கள் பல.

    ReplyDelete
  2. சேர்மன் அவர்களுக்கு

    நீங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை அசுத்தம் நிறைந்த இடத்திற்கு அழைத்து சென்று, அதை சீர் செய்ய கோரிக்கை வைத்திருக்கலாமே, ஏன் நீங்கள் அதனை செய்ய மருத்துவிட்டிர்கள்,

    அதிரையின் அவல நிலை தினமும் நம்ம ஊரு வலைதளங்களில் வருகிறது, அதனை பார்த்தும் ஏன் இன்னும் செயல் படாமல் இருகிறிர்கள்,

    மருத்துவமனைக்கு செல்லும் வழிய கூட (சேது ரோடு முதல் அரசு மருத்துவமனை வரை) உங்களுக்கு சுத்தம் செய்து குடுக்க முடியவில்லைய ஏன்?? மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் நீங்கள் நன்மை செய்கிறிர்கள், மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு நர்ர்கூலி தருவான். அனால் அதை அனுபவிக்க மக்கள் உயிரோட இருக்கணுமே, இந்த சாலையில் அவர்கள் பயணிக்கும்போது நோய் மேல் நோய் சேர்த்து கொண்டுதான் பயனிக்கிரிராகள்.

    மக்களை பாதுகாத்து பிறகு நல்லது செய்யலாமே.

    கருத்துக்காக மக்கள் நலன் நாடி

    முஹம்மத் ஷரீப்

    ReplyDelete
    Replies
    1. Please ask the ward members. Chairman will not be responsible for all wards, he is one of the responsible persons, but main role with ward members only.

      Delete
    2. Ward member responsible for Particular Ward, But chairmen responsible for all the area,

      சேர்மன் அவர்கள்தான் ஊருக்கு பொறுப்பு, அந்த அந்த ஏரியாவில் உள்ள குலற்றிற்கு அந்த வார்டு மெம்பெர்தானே பொறுப்பு, எதற்கு சேர்மன் தலை இடுகிறார், சேர்மன்தான் அனைத்துக்கும் பொறுப்பு, வார்டு மெம்பெர் ஆனாலும் சேர்மன் உத்தருவ் இன்றி எதவும் செய்ய முடியாது. நான் வார்டின் மக்களுகாக சொல்லவில்லை ஊரு மக்களுகாக சொல்கிறன். உங்களுக்காகவும் சேர்த்துதான்.

      சேர்மன் நினைத்தால் ஊரே சுத்தமாக வைக்கலாம்

      Delete
    3. குளம் என்பது 21 வார்டுகளிலும் இல்லை. அது பெரிய இடத்தில் Approval வேண்டும் அதற்கு நிச்சியம் சேர்மன் தலையீடு அவசியம். குப்பை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி முதலில் வார்டு மெம்பர் தான் அவர் முயற்சி செய்து நடக்க வில்லை என்றால் சேர்மனிடம் முறையிடலாம். அவரும் செய்ய வில்லை என்றால் அதற்கும் மேலிடத்தை அனுகலாம்.

      எல்லாவற்றிக்கும் சேர்மனை குறை கூருவது தவறு.

      முன்பு மர்ஹூம் MMS அவர்கள் சேர்மனாக இருக்கும் பொழுது, வார்டு மெம்பர் லத்தீப் அவருடைய தெருவை கூட்டாமல் (அன்று அவருடைய தெருவை கூட்டும் நாள்) வேறு இடத்தில் கூட்டிக்கொண்டு இருந்த பொழுது, டிராக்டரின் சாவிய எடுத்து MMS வாடிக்கு சென்று விட்டார். துப்புரவு தொழிலாளி MMS வாடிக்கு சென்ற பொழுது, MMS அவர்கள் உடனே லத்தீப் வார்டை கூட்ட உத்தரவிட்டார். இதிலிருந்து என்ன விளங்குகிறது. சேர்மனுக்கு தகவல் தெரிவிக்கிறது ஒவ்வொரு வார்டு மெம்பரின் கடமை.

      \\Ward member responsible for Particular Ward, But chairmen responsible for all the area\\

      If he has to look for each and every matter, it should be required more chairmen..What is the purpose of ward members?? Chief Minister cannot involve for all matters, so that MLAs are there. Hope you understand well. Wassalam..

      Delete
    4. Brother Mr.Abdin

      kindly find the below comments about Mr. Ansarkhan and Mr. Aslam.

      தங்களுக்கு ஒன்றை சொல்ல ஆசை படுகிறான்

      இந்த வார்டின் பிரச்சன்னை முதலில் அன்சர்கன் அவர்களிடம் சென்றது அவரால் முடியவில்லை, பிறகு சேர்மனிடம் சென்றது அவர் அந்த வார்டிற்காக ஒரு நன்மை செய்தார் என்ன தெரியுமா?? மூடி கிடந்த சாக்கடைய திறந்து போட்டு விட்டு சென்றார்கள்.

      இதனால் கால்வாயை மூடியிருந்த கற்கள் அகற்றப்பட்டு சாலையிலேயே போடப்பட்டன.

      இது ஒரு புறம் இருக்க அதிரையில் பெய்து வரும் கனமழையால் இப்பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து தேங்கியுள்ளது. பொது மக்கள் ஏராளனானோர் இப்பகுதியை கடந்து செல்லும் போது முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் பாதசாரிகள் இந்த தண்ணீரை கடந்து செல்வதற்க்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. கழிவு நீருடன் தேங்கி நிற்கும் மழை நீரால் இப்பகுதி மக்களுக்கும் இதனை கடந்து செல்பவர்களுக்கும் தொற்றுநோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

      இதற்க்கு யார் பொறுப்பு, வார்டு மெம்பெர் மட்டும்தான?????

      அதிரைக்கு வரும் நலத்திட்டம் குறிப்பிட்ட ஆளுகளுக்கு மட்டும்தான??

      அங்கு ஒழுங்கான சாலை அமைத்தே பல வருடம் ஆகி விட்டது.


      I hope you Understand, thanks for your reply

      Note: We always take care our Village People (Include You)

      Wassalam

      Delete
    5. No need to take care of me. Alhamdullillah.., Allah has given me knowledge how to be in with care. First keep clean your house surroundings (don't throw the dust outside, but keep it them in allotted place).

      Allah will give you all more understanding power.

      Wassalam..

      Delete
    6. ஒரு முஸ்லிம் மற்றோர் முஸ்லிமை சகோதரன் என்பான். என் சகோதரன் மீது எனக்கு அக்கறை இருக்கிறது. என் வீடை நா சுத்தமாக வைத்திருக்கிறேன். அதை போன்று என் தெருவையும் ஊரையும் சுத்தமாக வைக்க ஆசை படுகிறான். ஏன் என்றால் எல்லாரும் என் சகோதர்கள்.

      அறியுரைக்கு நன்றி சகோதர்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கொஞ்சம் செடியன் குலத்தையும் கவனிங்க சார்.
    அதன் அருகில் உள்ளவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாமல் போய்விட்டது.

    ReplyDelete
  5. Dear adirai people, I spoke with mr ansarkhan about waste water and hospital road maintenance, ansarkhan told me that, our president not permit to maintain hospital road , because some political problem with ansarkan and aslam.

    ReplyDelete
  6. செடியன் குளம் பற்றி ஆட்சியரிடம் பேசப்பட்டதா? நல்ல வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாமே

    ReplyDelete
  7. சேர்மன் என்பது நம்ம அதிரயை ஊருக்கே பொறுப்பு,‎
    கலெக்டர் என்பது நம்ம தஞ்சை மாவட்டத்துக்கே பொறுப்பு.‎
    அதிரை எந்த மாவட்டத்திலே இருக்குது?‎

    நேற்று வந்த கலக்டர் ஐயாவிடம் செடியன் குலத்தையும் காட்டி ‎இருக்கலாமே, வண்டிப்பேட்டை பகுதியை மட்டும் காட்டிவிட்டு வந்த ‎வழியே அனுப்பி விட்டால் எல்லாம் நடந்து விட்டது என்று அர்த்தமாகுமா? ‎

    செடியன் குளத்தை சுற்றி இருப்பவர்கள் பேசாமல் இருந்தாலும், சேமனுக்கு ‎பேச தெரியும்தானே, அப்புறம் ஏன் வாயை பொத்திக் கொண்டு இருக்க ‎வேண்டும்?‎

    அல்லது, செடியன் குளத்துக்கு வேறு சேர்மனா? அவர் எங்கு இருப்பார்? ‎அவர் வெளியில் வரமாட்டாரா?‎

    அதிரையில் என்ன நடக்குது. வெளிநாட்டில் இருக்கும் என்னைப் ‎போன்றோர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்குதே.‎

    மற்ற குளங்களைப் போன்று செடியன் குளமும் குளம்தானே! பிறகு ஏன் ‎இந்த பகிரங்க புறகணிப்பு?‎

    இதிலிருந்து என்ன தெரியுது, எல்லாமே வெட்ட வெளி வேஷம், யாரும் ‎அல்லாஹ்வுக்கு பயந்தவன் கிடையாது.‎

    அரசன் நீதி தவறினால் என்ன நடக்கும் என்று தெரியாதவன், அரசன் ‎பதவிக்கு தகுதியற்றவன் ஆகிவிடுகிறார். இது நான் சொல்லவில்லை, ‎சான்றோர்களின் வாக்கு.‎

    அதிரைக்கு நீதி வழுவாத அரசன்தான் வேண்டும்.‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.