யாழ்ப்பாணத்து தமிழர்கள் உணவில் ஏதாவது ஒருவகையில் தேங்காய் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். காரணம்,அங்கு விளையும் குவியல், குவியலான தேங்காய்தான். அந்த வகையில் தேங்காய் அதிகம் சேர்க்கப்படும் தொதலில் பூர்வீகம் யாழ்ப்பாணம் என்கிறார்கள்.
அதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சுற்றி தென்னந்தோப்புகள் அதிகம். தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் முக்கிய இனிப்பு பண்டமாக தொதல் விளங்குகிறது.
தொதலின் தொழில்நுட்பத்தை அறிந்து கீழக்கரையை சேர்ந்த செல்லக்கனி என்பவர் பழைய குத்பா பள்ளித் தெருவில், 45 வருடங்களுக்கு மேலாக குடிசைத் தொழில் போல தொதல் தயாரித்து விற்பனை செய்து நல்ல வரவேற்பை பெற்று இப்பகுதியில் தொதல் தயாரிப்பின் முன்னோடியாக திகழ்கிறார். தற்போது கீழக்கரையில் பலர் வீடுகளில் குடிசைத் தொழிலாகத் தொதலை செய்து வளைகுடா நாடு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.
ஒரு கிலோ தொதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 250 வரையிலும் விற்கப்படுகின்றது. இந்த தொதல் கடைகளில் கிடைக்காது.ஒரு மாதம் வரை கெடாது இத்தொழிலில் ஈடுபட்டு வரும் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்,வெளிநாடு செல்பவர்கள் தங்களின் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக கிலோ கணக்கில் வாங்கி செல்கிறார்கள்.இதன் சுவை அதிகமாக இருப்பதால் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் போன் மூலம் ஆர்டர் தருகிறார்கள் என்றார்.
செய்முறை :
பச்சரிசி 1 கோப்பை, 5 தேங்காய், சர்க்கரை 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம், 4 மேசைக் கரண்டி ஜவ்வரிசி (அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு) ஏலக்காய் தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் (6 டம்ளர்), சீனி, பனை வெள்ளம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.
பின்னர் 2 டம்ளர் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும். பின்னர் ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.
அல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் கேக்குகள் போன்று வெட்டிப் பரிமாறலாம்.
நன்றி : தினகரன்

கீழக்கரை தொதல் தான் தெரியுமா? நம்ம வூரு? கடற்கரை தெரு பெண்கள் மார்கெட்டில் ஹசன் லெப்பை என்பவர் தொதல் வியாபாரம் செய்ததை யாரும் மறக்க இயலாது, 200 கிராம் மதிக்கத்தக்க தொதல் விலை அப்போ 50 பைசா, 2 சாப்பிட்டால் போதும் பசி அடைங்கி விடும் அவ்வளவு சுவையாக இருக்கும்,
ReplyDeleteஇவருடைய வியாபாரம் கந்துரீலும் பார்த்து இருக்களாம். ரிசிப்பி கேட்கிறீங்களா? அது வந்து .........