இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் செய்து, அதன் பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இனங்களில் திருத்தம், குறைபாடுகள் இருந்தால் மனுதாரர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். மேலும், வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், மனுதாரர்கள், மேல்முறையீட்டாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டா மாறுதல் தொடர்பாக, தஞ்சாவூர் கோட்டத்தில் 27 மனுக்களும், கும்பகோணம் கோட்டத்தில் 15 மனுக்களும், பட்டுக்கோட்டை கோட்டத்தில் 13 மனுக்களும் நிலுவையில் உள்ளன.
மாவட்ட வருவாய் அலுவலரிடம் 25 பட்டா மாறுதல் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுக்களின் பட்டியல் முழு விவரங்களோடு பி.டி.எப். முறையில், மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்தவர்களின் பெயர், பட்டியலில் விடுபட்டிருந்தால் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரை நேரில் அணுகி விவரம் தெரிவிக்கலாம்.