.

Pages

Tuesday, October 14, 2014

எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ. நடத்திய என்கவுண்டரில் ஒருவர் பரிதாப பலி !

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து சென்றவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சையது முகமது என்பவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது சையது முகமதுவை உதவி ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


2 comments:

  1. விசாரணை நடப்பதை வீடியோ மூலம் படம் எடுக்க வேண்டும்.இது போல் செய்தால் உண்மை தெரியும்.

    ReplyDelete
  2. சையது முகமது கத்தியால் உதவி ஆய்வாளர் காளிதாஸ்சை குத்த முயன்றாராம் அதனால் தற்காப்புக்காக சுட்டாராம் என்று கதை விடுகிறார். எஸ் பி பட்டினத்தில் நிராயுதபாணியாக கைது செய்யப்பட்டு, 60 கிலோமீட்டர் தூரம் ராமநாதபுரம் அழைத்து வந்த பிறகு.. ஸ்டேஷனில் வைத்துத்தான் கத்தியால் குத்தினாரா..? கதை விட கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா..?

    இந்த குற்றவாளி ஆளுங்கட்சிக்கு வேண்டியவராகவோ , அல்லது பெரிய அரசியல் செல்வாக்கு உடையவராக இருந்தால் இந்த போலீஸ் அதிகரி சுட்டு இருப்பாரா? ப்ளான் பண்ணி செய்து இருக்கான், உதவி ஆய்வாளர் தண்டிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.