விசாரணையின் போது சையத் முகம்மதுக்கும் உதவி ஆய்வாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னை கத்தியால் குத்த முயன்றதால் தற்காப்புக்காக சையத் முகம்மதை சுட்டு கொன்றதாக கூறும் உதவி ஆய்வாளர் காளிதாஸின் கூற்று அப்பட்டமான பொய்யென்று கூறப்படுகிறது.
தன்னை கைது செய்யும் போது கத்தியால் குத்தாதவர்,60கிலோ மீட்டர் தூரம் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்படும் போது கத்தியால் குத்த முயற்சிக்காதவர் காவல் நிலையத்தில் வைத்து குத்த முயற்சித்தார் அதனால் துப்பாக்கியால் சுட்டேன் என்ற காளிதாஸின் வாதம் திட்டமிட்ட என்கவுண்டர் படுகொலையை மூடி மறைக்கும் செயலாகும்.
கொலைக்கு காரணமான உதவி ஆய்வாளர் காளிதாஸை கொலை வழக்கின் கீழ் கைது செய்து துறை ரீதியாகவும்,சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதோடு, கொலையுண்டவரின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதாக இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி கூறியுள்ளார்.
செய்தி : முதுவை ஹிதாயத்
அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் கயவாளிகளை முச்சந்தியில் வைத்து சுட்டு கொல்லனும். அப்பத்தான் உயிர் மதிப்பு என்னவென்று மற்ற அதிகாரிகளுக்கு புரியும்.
ReplyDeleteAdirai news nu pera vachu kethu vera oor news update pandriga
ReplyDelete