.

Pages

Wednesday, October 15, 2014

விசாரணை கைதியை சுட்டு கொன்ற போலீஸ் அதிகாரிக்கு ISF கடும் கண்டனம் !

இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டினத்தை சேர்ந்த சையத் முகம்மது என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த மற்றொருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சையத் முகம்மதை கைது செய்து இராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த உதவி ஆய்வாளர் காளிதாஸ் தனது துப்பாக்கியால் சையத் முகம்மதை சுட்டு கொன்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையின் போது சையத் முகம்மதுக்கும் உதவி ஆய்வாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னை கத்தியால் குத்த முயன்றதால் தற்காப்புக்காக சையத் முகம்மதை சுட்டு கொன்றதாக கூறும் உதவி ஆய்வாளர் காளிதாஸின் கூற்று அப்பட்டமான பொய்யென்று கூறப்படுகிறது.

தன்னை கைது செய்யும் போது கத்தியால் குத்தாதவர்,60கிலோ மீட்டர் தூரம் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்படும் போது கத்தியால் குத்த முயற்சிக்காதவர் காவல் நிலையத்தில் வைத்து குத்த முயற்சித்தார் அதனால் துப்பாக்கியால் சுட்டேன் என்ற காளிதாஸின் வாதம் திட்டமிட்ட என்கவுண்டர் படுகொலையை மூடி மறைக்கும் செயலாகும்.

கொலைக்கு காரணமான உதவி ஆய்வாளர் காளிதாஸை கொலை வழக்கின் கீழ் கைது செய்து துறை ரீதியாகவும்,சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதோடு, கொலையுண்டவரின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதாக இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி கூறியுள்ளார்.

செய்தி : முதுவை ஹிதாயத்

2 comments:

  1. அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் கயவாளிகளை முச்சந்தியில் வைத்து சுட்டு கொல்லனும். அப்பத்தான் உயிர் மதிப்பு என்னவென்று மற்ற அதிகாரிகளுக்கு புரியும்.

    ReplyDelete
  2. Adirai news nu pera vachu kethu vera oor news update pandriga

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.