.

Pages

Saturday, October 18, 2014

TNTJ நடத்தும் இஸ்லாமிய நிகழ்ச்சியில் பங்கேற்க பிஜேபி மாநில செயலாளர் கருப்பு முருகானந்ததிற்கு அழைப்பு !

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ன் சார்பாக 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற கேள்வி - பதில் நிகழ்ச்சி நாளை 19-10-2014 காலை 10 மணிக்கு முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மை குழுவின் உறுப்பினர் M.A. பக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்து கொண்டு இஸ்லாம் மார்க்க தொடர்பான எழும் சந்தேகங்களுக்கு நேரடியாக பதில் அளிக்க இருக்கிறார்.

இதற்கான அழைப்பு பணியை கிளை நிர்வாகிகள் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியதில் மங்களூர் செம்படவன்காடு ஜாம்புவானோடை. கல்லடிகொல்லை போன்ற முத்துப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று பத்திரிக்கை அழைப்பு கொடுத்தனர்.

இதில் பிஜேபி கட்சியின் மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தின் இல்லத்திற்கு நேரடியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்தி : அதிரை அப்துல் ரஹ்மான் 

7 comments:

  1. எல்லாம் வல்ல அல்லாஹ்,அவருக்கு ஹிதாயத் கொடுப்பானாக

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அழைப்பதும், அழைக்கப்படுவதும் நல்லது.‎
    அதுபோல் அரவணைப்பும், அரவணைக்கப்படுவதும் மிக மிக நல்லது.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. அருமையான அழைப்பு இது தான் உன்மையான தாவா.இஸ்லாத்தை தெறிந்தகொள்ளட்டும்.என்ன சொல்கிறதுமார்க்கம்.

    ReplyDelete
  4. இஸ்லாத்தையும் நபிகளாரையும் தீர்த்து கட்ட துடித்தவர் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை கொடுத்தான், இன்னும் தான் நாடுவோர்க்கு நேரான வழியை காண்பிப்பவன், இது சிறந்த முயற்ச்சி எதிரி என்று ஒதுங்குவதை விட அவர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போது கொள்கையை எடுத்துரைப்பது சிறந்தது

    எல்லாம் வல்ல அல்லாஹ்,அவருக்கு ஹிதாயத் கொடுப்பானாக ஆமீன்..

    ReplyDelete
  5. நல்ல முயற்சி, நெருங்கி பழகும்போதுதான் புரிதல் உண்டாகும். வல்ல இறைவன் ஹிதாயத் எனும் நேர்வழியை காட்டுவானாகவும் ஆமீன்

    ReplyDelete
  6. யார் யார்க்கு நம்மை படைத்த இறைவன் நல்வழி கான் பிப்பான் என்பது நமக்கு தெரியாது .அது போல் இவருக்கும் நல் வழி கான்பிப்பனாக . இன்ஷா அல்லா.

    ReplyDelete
  7. அருமையான அழைப்பு அல்லாஹ்வே .பேஈதுமானவன் .அழைப்புபணி .நம்மை .சார்ந்தது .இதற்க்கு .வெற்றியை .தருவது .அல்லாஹ்வின் .நாட்டம் .இதில்கலந்தவர்களுக்கு .இறைவனின் .சாந்தியும் .சமாதானமும் .என்றும் .நிலவ .அருள் புரிவானாக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.