.

Pages

Friday, September 25, 2015

சாதனை நிகழ்த்திய 3 ஸ்டார் ஜிம் மாணவர்கள் கெளரவிப்பு !

உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜிம்’முக்கு செல்பவர்கள் உண்டு. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் ஜிம்முக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஜிம்மில் இடம்பெற்றுள்ள அதி நவீன கருவிகள் மூலம் தங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் உடல் பயிற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதிரை பேரூந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் ( பழைய கனரா வங்கி மேல் மாடியில் ) இயங்கும் 'த்ரீ ஸ்டார் ஜிம்'மில் ஏராளமானோர் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் - பேராசிரியர்கள் - அலுவலர்கள் - விளையாட்டு ஆர்வலர்கள் வரை அடங்குவர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் மாவட்ட அளவிலான நடைபெற்ற பாடி பில்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் பவர் லிப்டிங் போட்டிகளில் பல்வேறு ஊர்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் அதிரை த்ரீ ஸ்டார் ஜிம்' மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் பெஞ்ச் பிரஸ் போட்டியில் 80 கிலோ எடை பிரிவில் முத்து முதல் இடத்தையும், அப்துல் ரவூப் இரண்டாம் இடத்தையும், பாடி பில்டிங் போட்டியில் முத்து இரண்டாம் இடத்தையும், அப்துல் ரவூப் நான்காம் இடத்தையும், குட்டி ராஜ் ஐந்தாம் இடத்தையும் பெற்று சாதனை நிகழ்த்தினார்கள்.

இதையடுத்து சாதனை நிகழ்த்திய மாணவர்களை கெளரவிக்கும் வகையில் பாராட்டு விழா இன்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு த்ரீ ஸ்டார் ஜிம் உரிமையாளர் பி.எம்.ஏ நஜ்முதீன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி, அதிரை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைசிட்டி அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ், பத்திரிகை ஆசிரியர் நிஜார் அஹ்மது, சமூக ஆர்வலர் இக்பால் மற்றும் பத்திரிகையாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சாதனை நிகழ்த்திய மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனர்.
 

2 comments:

  1. வாழ்த்துக்கள் நஜிமூதீன் காகா மேலும் மேலும் முன்னேர நமது ஜிம் முதலிடம் வர அல்லாவிடம் தூவா செய்கிரேன்.

    இப்படிக்கு
    S.S.M.யாசின்

    ReplyDelete
  2. ஜிம் ஜம்முன்னு இருக்கு. செய்தி ஜில்லுன்னு இருக்கு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.