பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் லாரியுடன் தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிரை இளைஞர்கள் காவல்துறை உதவியுடன் தப்பிச்சென்ற லாரியை மடக்கி பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதற்காக இளைஞர்கள் குழுவினர்களாக பிரிந்து சென்று நாளா திசைகளிலும் தேடிச்சென்றனர்.
இதில் திருவோணம் சாலையில் கக்கரைக்கோட்டை என்ற கிராமத்தின் அருகே சிமெண்ட் லோடுடன் நின்றுகொண்டிருந்த லாரியின் முன்புற பகுதி தேசமடைந்து இருப்பதை கண்டனர். முகப்பு பகுதியில் இரத்த கரை படிந்திருப்பதை கண்டுபிடித்தனர். மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரி இதுதான் என தெரியவந்தது. ரெட்டிப்பட்டிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு இராமநாதபுரம் செல்ல இருந்ததும் தெரியவந்தது. லாரியின் முன்புற பகுதி டயரில் உரசி தீப்பற்றியதால் லாரியை விட்டுவிட்டு ஓட்டுனர் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் லாரியை ஒரத்தநாடு காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உடல் பிரத பரிசோதனை முடியும் வரை ஒரத்தநாடு அரசு மருத்துவனையிலும், காவல்நிலையத்திலும் அதிரை இளைஞர்கள் சோகத்துடன் குழுமி இருக்கின்றனர். சம்பவ இடத்தில முகாமிட்டுள்ள பேராசிரியர் செய்யது அஹமது கபீர் பிரத உடலை பெற வேண்டிய பணிகளை உடனிருந்து உதவி வருகிறார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஅன்னாரின் குடும்பத்திற்கு மன வழிமையேய் அதிக படுத்துவாயாக... ஆமீன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்