.

Pages

Tuesday, September 22, 2015

பலத்த போலீஸ் பாதுகாப்பில் முத்துப்பேட்டை !

முத்துப்பேட்டையில் இன்று மாலை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெருகிறது. இதற்கு தேசிய பாதுகாப்பு பேரவை தலைவர் பொன்னுசாமி தலைமை வகிக்கிறார். இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசுகிறார். ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிதம்பரம் ராமஜெயம், அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி துவக்கி வைக்கிறார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகாணந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா ஆகியோர் கலந்துக் கொள்கிறனர். ஊர்வலத்தில் உப்பூர், தில்லைவிளாகம், ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. முன்னதாக மதியம் 2 மணிக்கு துவங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரான் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத் நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல் வழியாக மாலை 6 மணிக்கு செம்படவன் காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் கடந்த ஒரு வாரமாக திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன். திருவாரூர் கலெக்டர் மதிவாணன் ஆகியோர் முத்துப்பேட்டையில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகிறன்றனர்.

மேலும் ஊர்வல பாதையை முழுவதும் கண்காணிப்பு சேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் போது அதனை படம் பிடிக்க 100க்கும் மேற்ப்பட்ட வீடியோக் கேமராக்கள் பயன்படுத்த உள்ளனர். ஊர்வலம் செல்லும் பாதையில் ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. சாலை இருபுரங்களிலும் தடுப்பு வேலிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பேரிக்காடு அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்த உள்ளனர். கலவரத்தைத் தடுக்க ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்வலத்தில் திருச்சி சரக ஐ.ஜி.ராமசுப்பிரமணியன் தலைமையில் தஞ்சை டி.ஐ.ஜி, திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன், தஞ்சை எஸ்.பி.தர்மராஜ், நாகை எஸ்.பி.அபினவ் மற்றும் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் எஸ்.பிக்கள் மற்றும் திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 2000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். மேலும் திருவாரூர் கலெக்டர் மதிவாணன், மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் பழனி வேல், மற்றும் நீடாமங்கலம், வளங்கைமான், குடவாசல், மன்னார்குடி பகுதி தாசில்தார்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

மேலும் முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே போன்று முத்துப்பேட்டை சுற்று புறப்பகுதியில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து போலீசார் தீவர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போன்று கடல் வழியாக தீவீரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரைப் பகுதிகள் மற்றும் அலையாத்திக்காடுகள், லகூன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்படை போலீசாரும் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
 
 

2 comments:

  1. முத்துபேட்டை விநாயகர் ஊர்வலத்திலும் இப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் ..???
    முத்துபேட்டை காவல்துறைக்கு அதிகம் கவனம் மற்றும் எச்சரிக்கை அவசியம் .

    பழனியில் இந்து முன்னனி அராஜகம் :-

    கடந்த 20.09.15 ஞாயிறு அன்று இந்து முன்னனி மற்றும் VHP சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது இதில் வண்டி எண் இல்லாத ஒரு ட்ராக்டர் வண்டியிருந்து இந்து முன்னனி கயவர்களால் கற்கள் பழனி சின்னப் பள்ளிவாசலை நோக்கி எரியப்பட்டதில் ஜமாதார்கள் 3பேர் காயமடைந்தனர்.

    ஊர்வலத்தில் 43 சிலைகள் அமைதியாக சென்றது பிறகு வந்த 44 வது வண்டியிலிருந்து சம்பவம் மாலை சுமார் 7:15 மணியளவில் நடந்தது. காவல் துறைகள் இருந்தும் இது போன்ற சம்பவங்கள் திராணியுடன் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்னும் வழக்குகள் பதியாமலும், நடவடிக்கைகள் எடுக்காமலும் கண்துடைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றது பழனி காவல் துறை.

    இன்னும் இன்றும், நாளையும் என்ன நடக்குமோ என்று பழனியில் பதட்டம் நிலவுகிறது.

    - கண்டனத்துடன்
    கீரனூர் குரல்

    ReplyDelete
  2. ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் காவல் துறையினர் வெளியூர் மக்கள்/ அமைப்பினர் உள்ளுரில் தங்கப் பட்டுள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும் அதே நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து விட்டால் பிரச்சனை முற்றிலும் குறைந்து விடும். காவல் துறையே ! இதே சிறப்பு கவன ஏற்பாடு கந்துரி விழாவுக்கும் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.