இந்நிலையில் வறண்டு கிடக்கும் அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார்.
இந்நிலையில் இவர் மேற்கொண்ட முயற்சிக்கு பலனளிக்கும் வகையில்
இன்னும் சில மணி நேரங்களில் ஆற்று நீர் சிஎம்பி வாய்க்கால் வழியே அதிரை குளங்களுக்கு வரஇருக்கிறது. தவழ்ந்து வரும் ஆற்று நீரை பாதுகாப்பாக ஊர் கொண்டு வந்து வறண்டு காணப்படும் அதிரையின் அனைத்து குளங்களுக்கு நிரப்ப தன்னார்வலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ஊழியர்களின் உதவியோடு சிஎம்பி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பு - உடைப்புகளை சீர்செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.



Allah nalla sukaththai tharuvan
ReplyDeleteadirai makkalen nanmaikkaha
poradum thalaivar& su...mu...ka.
வரும் தண்ணீரை எல்லா குலங்களுக்கும் செல்ல வேண்டுமென்றால் ஆக்கபூர்வமான தடுப்பணைகள், தூர்வாருதல், கரைகளை செப்பனிடுதல், வாய்கால்களை செப்பனிடுதல் , கடைமடைக்கு போகும் வழியில் விளைந்திருக்கும் செடிகொடிகளை அப்புறபடுத்தி, நதியில் படர்ந்திருக்கும் படர்தாமரைகளை அகற்றுதல், போன்ற வேலைகள் முன்பு செய்திருக்க வேண்டும். எந்த வேலையும் நதிநீர் கட்டுப்பாட்டு வாரியம் செய்யாமல் இருப்பதால் வீணாக கடலில் தான் தண்ணீர் சேரும். அதிரையில் குறுப்பிட்ட குளங்களுக்கு மட்டும் நீர் வரும் வாய்ப்பு உள்ளது; வார்டு கௌன்சிலர் தக்க நடவடிக்கை எடுத்தால் தரகர் தெரு குளமும் ஜொலிக்கும் , முயற்சி நடக்குமா?
ReplyDeleteதேவ்வை இல்ல அரிஉரை
ReplyDeleteஎந்த வார்டு மெம்பெர் வந்து நிக்கபோறான்
ReplyDeleteசேர்மனை பாராட்டுவோம்.
ReplyDeleteஅதேநேரம்
சிஎம்பிக்கு வரும் காவிரித் தண்ணீரை வரவேற்க சி எம் பி லைனில் உள்ள அனைத்து வீடுகளின் சாக்கடைகளும் தயாராக அணிவகுத்து நிற்கின்றன என்பதையும் வேதனயுடன் குறிப்பிட விரும்புகிறேன்.