இதில் தரகர்தெரு பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 11 பேர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தவர்களின் விவரங்கள் முகைதீன் ஜும்மா பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை எதிர்வரும் அன்று [ 08-09-2015 ] திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு எதிர்வரும் 13-09-2015 அன்று தேர்தல் நடத்தப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இறுதியில் 9 பேர்கள் பள்ளி நிர்வாக பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் முஹல்லா வாசிகள் காவல்நிலயத்திற்கோ , கோர்ட் என செல்லாமல் தெரு பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு வந்தனர் தற்போது நிலைமை அவ்வாறில்லை. இதற்க்கு முந்திய நிர்வாகம் பல முயற்சிகள் மேற்கொண்டு தெரு நலனிற்காக பாடுபட்டனர் அவர்கள் மீதுக்கொண்ட கால்புனர்ச்சியால் பிரச்சனைகள் உண்டாக்கி பல குழுக்களாக உருவெடுத்தது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை தெரு பஞ்சாயத் மாற்றுவது முரணானது, அருகில் உள்ள தெருவிற்கு தண்ணீர் தொட்டி அமைக்க தடையாக இருப்பது நிலம்; அது வக்குப் போர்டில் இருப்பது தான். இதே நிலைமை இங்கே வரவேண்டும் என்று நினைப்பது மேலே போட்டியிடும் நபர்கள் தான் காரணம் ஒவ்வொரும் தன்னை பாதுகாத்துக்கொள்ள ஒரு குழுவாக இருக்கிறார்கள். பல குழுவாக இருக்கும் முஹல்லாவில் தேர்தல் நடந்தாலும் அமைதியும், தெரு முன்னேற்றமும் காணல் நீர் தான். தற்போதுள்ள நிர்வாகம் அரசு அதிகாரிக்கோ அல்லது கிராம நிர்வாகத்திற்கு கட்டுப் படாதவர்கள் எப்படி அமைதி கொண்டு வரமுடியும்?
ReplyDeleteஎந்த பிரச்சனையாக இருந்தாலும் முஹல்லா வாசிகள் காவல்நிலையத்திற்கோ , கோர்ட் என செல்லாமல் தெரு பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு வந்தனர் தற்போது நிலைமை அவ்வாறில்லை.
Deleteஅருகில் உள்ள தெருவிற்கு தண்ணீர் தொட்டி அமைக்க தடையாக இருப்பது நிலம்; அது வக்ஃப் போர்டில் இருப்பது தான். இதே நிலைமை இங்கே வரவேண்டுமா..???
மஸ்தான் கனி காக்கா வின் இந்த இரு கருத்தில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.
மேலும் தெருவாசிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தெரு நலனில் அக்கறை செலுத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...
தரகர் தெரு என்கிற பெயர் அதிராம்பட்டினத்தின் வரலாற்றோடு தொடர்புடையது; வரலாற்றை பறைசாற்றுவது ஆகும்.
ReplyDeleteஇந்தப் பெயரை ஆசாத் நகர் என்று மாற்ற வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.