நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அருவிகளில் பேரிரைச்சலுடன் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக கேரளாவில் மழை பெய்யும்போது, குற்றால மலைப்பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும்.
அத்துடன் குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் சாரல் மழையுடன் இதமான சூழல் இருக்கும் என்பதால், நாட்டின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.
இந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை நாளை தொடங்கும் என எதிபார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால், குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
மெயின் அருவி எனப்படும் பிரதான அருவியில், குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள பாதுகாப்பு ஆர்ச்சையும் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அந்த அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதே போல், ஐந்தருவியில் உள்ள ஐந்து கிளைகளிலும் இரைச்சலுடன் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. காடுகளில் உள்ள காய்ந்த மரங்கள், பாறைகள் போன்றவை தண்ணீருடன் உருட்டி வரப்படுவதால், இந்த அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
- ஆண்டனிராஜ்
நன்றி: விகடன்
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக கேரளாவில் மழை பெய்யும்போது, குற்றால மலைப்பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும்.
அத்துடன் குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் சாரல் மழையுடன் இதமான சூழல் இருக்கும் என்பதால், நாட்டின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.
இந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை நாளை தொடங்கும் என எதிபார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால், குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
மெயின் அருவி எனப்படும் பிரதான அருவியில், குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள பாதுகாப்பு ஆர்ச்சையும் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அந்த அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதே போல், ஐந்தருவியில் உள்ள ஐந்து கிளைகளிலும் இரைச்சலுடன் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. காடுகளில் உள்ள காய்ந்த மரங்கள், பாறைகள் போன்றவை தண்ணீருடன் உருட்டி வரப்படுவதால், இந்த அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
- ஆண்டனிராஜ்
நன்றி: விகடன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.