.

Pages

Saturday, June 25, 2016

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் புகை வண்டி நிலைய வளாகத்தில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பாக சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இப்பேரணியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பான போதைப்பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளான எச்.ஐ.வி. தொற்றுநோய்கள், இதயம், நுரையீரல், சிறுநீரக கோளாறுகள், மன ரீதியான பாதிப்புகள் மற்றும் போதை பொருள் பயன்படுத்தினால் எடுக்கப்பட்டு வரும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.  இப்பேரணியானது புகை வண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக அரண்மனை வளாகத்தில் சென்றடைந்தது.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் வழங்கிய இரண்டு 108 இரு சக்கர  ஆம்புலென்ஸ் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். ஒரு இரு சக்கர வாகனம் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியிலும், மற்றொரு இரு சக்கர வாகன கும்பகோணம் நகராட்சி பகுதியிலும் பயன்படுத்தப்பட உள்ளது. 108 நான்கு சக்கர ஆம்புலென்ஸ் வாகனம் செல்ல முடியாத இடங்களில் இந்த 108 இரு சக்கர ஆம்புலென்ஸ் வாகனம் சென்று முதலுவி வழங்கும்.

இப்பேரணியில் உதவி ஆணையர் (கலால்) திரு.செல்வம், கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன், இணை இயக்குநர் (மருத்துவப்பணி) டாக்டர்.ஜெயசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் சுப்பிரமணியன், டாக்டர்.சிங்காரவேல், ரெட்கிராஸ் தலைவர் திரு.ராஜமாணிக்கம், திரு. ஜெயக்குமார், திரு.முத்துக்குமார், திரு.சுப்ரமணியன் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.