.

Pages

Wednesday, June 8, 2016

நிரம்பும் தருவாயில் செக்கடி குளம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிராம்பட்டினம் ஜூன்-08
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த வருடம் பணிகள் நடந்தது. மேலும் ஆலடி குளம், செக்கடி குளம் உள்ளிட்ட குளங்களுக்கும் நீர் இறைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைக்கும் பணி கடந்த 21-05-2016 முதல் நடந்தது. பம்பிங் நீர் முதலில் ஆலடிக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள செக்கடி குளத்திற்கு வந்தது.

தொடர் வரத்தை அடுத்து செக்கடி குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து நிரம்பும் தருவாயில் உள்ளது. இதில் இப்பகுதியை சேர்ந்த நோன்பாளிகள் மாலை நேரங்களில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

செக்கடி குளம் நீர் மட்டத்தை அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக நம்மிடம் கூறுகையில், சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள காட்டுக்குளம், மரைக்கா குளங்களுக்கு பம்பிங் நீரை கொண்டு வருவதற்காக சுமார் 19 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வண்டிப்பேட்டை பகுதி முதல் காட்டுக்குளம், மரைக்கா குளம் வரையில் குழாய்கள் புதைக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.