.

Pages

Sunday, June 19, 2016

அதிரை ஈசிஆர் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடை மூடல் !

அதிராம்பட்டினம், ஜூன் 19
தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இயங்கும் மதுக்கடை இன்று முதல் மூடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 16 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இயங்கும் மதுக்கடை எண்: 8086 இன்று முதல் மூடப்படுகிறது.

அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மொத்தம் 4 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு அதிக  உயிரிழப்பு ஏற்பட்டது. குறிப்பாக அதிரை ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளால் அதிரை காவல் நிலையத்தில் அதிகமான வழக்குகள் பதிவாகியது.

இந்த நிலையில் தமிழக அரசு பிறபித்த உத்தரவில்  இதில் அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இயங்கும் மதுக்கடை எண்: 8086 ஒன்றாகும். இதனால் அதிரை பகுதியில் இயங்கி வந்த மதுக்கடைகளின் மொத்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளன.

அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை மதுக்கடையை மூட உத்தரவு பிறப்பித்த தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலை மற்றும் அதிராம்பட்டினம் - ஏரிபுறக்கரை ஈசிஆர் சாலையில் இயங்கி வரும் மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் இணைப்பு:  கடந்த மே 5 ந் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதிரை ஈசிஆர் சாலையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் போது எடுத்த படம்.

3 comments:

  1. அதிராம்பட்டினம் - ஏரிபுறக்கரை ஈசிஆர் சாலையில் இயங்கி வரும் மதுக்கடையை மூட வேண்டியது மிக அவசியமாகும்!!!

    ReplyDelete
  2. ரொம்ப நாள் பார்த்து நான் வருத்தபட்டஒன்று இன்று மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இதே ரோட்டில் இன்னொரு கடையிருக்கிறது அதையும் மூட வேண்டும். கெட்டது கிடைக்காத தூரத்தில் இருந்தால் அழிவை தடுக்கமுடியும்

    ReplyDelete
  3. ரொம்ப நாள் பார்த்து நான் வருத்தபட்டஒன்று இன்று மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இதே ரோட்டில் இன்னொரு கடையிருக்கிறது அதையும் மூட வேண்டும். கெட்டது கிடைக்காத தூரத்தில் இருந்தால் அழிவை தடுக்கமுடியும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.