.

Pages

Friday, June 17, 2016

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு !

தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் 2655 எம்.பி.பி.எஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (15 சதவீதம்) 398 போக 2257 இடங்களை தமிழக அரசு இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது.

அதுபோக சென்னை கே.கே. நகரில் மற்றும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் தலா ரூ.100 வீதம் 200 இடங்கள் மொத்தம் உள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இ.எஸ்.ஐ தொழிலாளர் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் தலா 35 வீதம் 2 கல்லூரிகளிலும் 70 இடங்கள் போக மீதமுள்ள 130 இடங்களையும் இந்த ஆண்டு தமிழக அரசு நிரப்புகிறது.

இதுதவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 470 என ஆக மொத்தம் 2853 எம்.பி.பி.எஸ் இடங்கள் இந்த வருடம் நிரப்பப்படுகிறது.

இது போல அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் இதன் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மாணவர்களிடம் இருந்து மொத்தம் 26017 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்பித்த 203 படிவங்கள், தகுதியற்றவை என 435 நிராகரிக்கப்பட்டன. தகுதியுள்ளதாக 25,379 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன.

இதில் மாணவர்கள் 9017 பேரும் மாணவிகள் 16,361 பேரும் ஆவர்.

சுப்பிரமணி என்ற திருநங்கை ஒருவரும் தகுதி உடையவராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ரேங்க் பட்டியலை வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( http://cms.tn.gov.in//sites/default/files/whatsnew/mbbs_bds_meritlist_170616.pdf )

ரேங்க பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் விவரங்களை அவர் அறிவித்தார். இதில் 3 பேர் 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தனர். மற்ற 7 மாணவர்கள் 199.75 கட்-ஆப் மார்க் எடுத்துள்ளனர். முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:-

1. ஆதித்யாமகேஷ் (200), கன்னியாகுமரி
2. வி. விக்னேஷ் (200), ஈரோடு
3. ஞானவேல் (200), விஜயவாடா - ஆந்திரா
4. கே. கார்த்திக் (199.75), நாமக்கல்
5. சுஜின்குமார் (199.75), நாகர்கோவில்
6. அருனேஷ் (199.75), ஈரோடு
7. அக்‌ஷயா (199.75), தருமபுரி
8. அப்துல் ஷருக் (199.75), திருச்சி
9. தினேஷ்வர் (199.75), ஊத்தங்கரை
10. வி. ஆர்த்தி (199.75), ஊத்தங்கரை.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தரவரிசை பட்டியலில் 200 கட்ஆப் மார்க் எடுத்து 3 பேர் முதலிடத்தில் உள்ளனர். 199 கட்-ஆப் வரை 190 பேர் உள்ளனர்.

முதல்கட்ட கலந்தாய்வு 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கத்தில் நடக்கிறது.

20-ந்தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு கவுன்சிலிங் நடைபெறுகிறது. 21-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் செந்தில் குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் விமலா, மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் உள்ளிட்ட அதிகார்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.