அதிரை நியூஸ்: ஜூன் 30
இன்று (30.06.2019 ஞாயிறு) மாலை சுமார் 5.40 மணியளவில் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விலகி விபத்திற்குள்ளானது.
இன்று துபையிலிருந்து 181 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு வந்து விபத்தில் சிக்கியது எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமான ஓடுதளத்திலிருந்து விமான நிலையத்தில் டேக்ஸிவே எனப்படும் விமான நிறுத்தத்தை நோக்கி வந்தபோது விமானம் புல்தரை மண்ணிற்குள் சறுக்கிச் சென்று புதைந்ததால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கண்ணீர் நினைவலைகள்:
கடந்த 2010 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் இதேபோல் துபையிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 158 பயணிகள் உயிரிழந்தது இந்தியர்கள் மத்தியில் சோக அலையை எழுப்பியிருந்தது நினைவு கூறத்தக்கது.
Source: Indian Express
தமிழில்: நம்ம ஊரான்
இன்று (30.06.2019 ஞாயிறு) மாலை சுமார் 5.40 மணியளவில் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விலகி விபத்திற்குள்ளானது.
இன்று துபையிலிருந்து 181 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு வந்து விபத்தில் சிக்கியது எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமான ஓடுதளத்திலிருந்து விமான நிலையத்தில் டேக்ஸிவே எனப்படும் விமான நிறுத்தத்தை நோக்கி வந்தபோது விமானம் புல்தரை மண்ணிற்குள் சறுக்கிச் சென்று புதைந்ததால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கண்ணீர் நினைவலைகள்:
கடந்த 2010 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் இதேபோல் துபையிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 158 பயணிகள் உயிரிழந்தது இந்தியர்கள் மத்தியில் சோக அலையை எழுப்பியிருந்தது நினைவு கூறத்தக்கது.
Source: Indian Express
தமிழில்: நம்ம ஊரான்